Posts

Showing posts from May, 2014

மெல்லிய அலைகளை தேடி...!!!

Image
அகத்திய உள்ளங்களை ஒரு சிறிய இடைவெளிக்குபின் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன்.கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.நிறைய கடிதங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.பொதுவாக அடுத்து அடுத்து விரைவாக கட்டுரைகளை எழுதுங்கள் என்ற வேண்டுகோள்.மாதம் ஒரு கட்டுரையாவது அகத்தியத்தில் வெளியிட முயற்சிசெய்கிறேன்.எல்லாம் இறைவன் சித்தம் ..!! வேலை தேடி அலையும் மக்கள் ஒரு புறம்,பொருள் தேடும் மக்கள் ஒரு புறம். இனி வரும் காலமெல்லாம் Data analytical world .எந்த தொழிலை எப்படி செய்வது ? அதன் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு ? இதற்கெல்லாம்  எல்லா முடிவுகளுமே ஏற்கனவே எடுத்தாகிவிட்டது.ஆக  80%   முடிகள் மற்றவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்று அவர்களை போல முடிவுகளை எடுத்தும், 20% முடிவுகளை மட்டுமே  சுயமாக எடுத்துக்கொண்டும் வாழ்கை நடத்தும் மக்கள் ஒரு புறம்,இப்படி இது போல இன்னும் பல வழிகளில் இந்த பொருள் தேடும் உலகம் எப்பொழுதும் busyயாக ஓடிக்கொண்டிருகிறது.இது என்றும் இப்படிதான் ...!! அருள் தேடும் உலகம் செல்வோம்...வாருங்கள்..! ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி,ஒன்று பலவாகி,ஒன்றில் ஒன்று கலந்து, ஒன்று மற்றத