Posts

Showing posts from June, 2020

யாமெனும் இறை II !!

Image
ஆழ்ந்து  ஆழ்ந்து எம்முள்ளே எம்  உள்ளத்துள்ளே  நீண்ட  நெடிய  பயணம்  ஒன்றை  மேற்கொண்டு  பயணிக்கின்றோம்  ,பிரம்மமாய்  ஆதியாய்  ஜோதியாய்  இருக்கும்  நின்  அற்புத  தரிசனம்  காண  வியல்கின்றோம்  இறைவா .நிமிடங்களும்,நாட்களும் ,வருடங்களும்  கடந்து  ஓடுகிறது .இப்பிறவியே  சென்றாலும்  மீண்டும்  மீண்டும்  தொடருவேன் எம்  பயணத்தினை ..நினை  காண நின் தரிசனம்  பெற  நின் திருவடி  ஒன்றே  கதி  எமக்கு  .நின்  சிறு பிம்பம்  யாம்    இதை  உன்னில்  கலக்க  யாம்   இருப்பதை பரிபூரணமாக  உணருகின்றோம் எம்பெருமானே  !! தூய ஒளியே !! மாபெரும்  சர்வ வல்லமை  கொண்டோனே  !! அணு முதல்  பேரண்டம்  வரை  ஊடுருவி  இமைப்பொழுதில்  எல்லாம்  ஒன்றாய்  அறியும்  திறன் கொண்ட  திவ்ய  பிரம்மஸ்வரூபமே .!!! நின் கருணை  இல்லா   உயிர்  ஏது  .நின் அருள் அலை ஊடுருவ  இயலாத இடம்  ஏது  இப்பிரபஞ்சத்தில் . எங்கெங்கும்  நின்  படைப்பில்  அன்பும்  கருணையும்  நிறைந்துள்ளது .ஒன்றை  மற்றொன்றாய்  மாற்றிக்கொண்டேயிருக்கும்  நின்  மாபெரும்  இந்த நுட்பம்  நிறைந்த  அற்புத  திறமையினை எண்ணி எண்ணி நின்  பெருமை கண்டு வியந்து நிற்கின்றோம்  பலமுறை .ஆருயிர் தந்த  மகா தேஜஸ