உடலே போற்றி !! உள்ளமே போற்றி !!!



உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப் படாத களிவந்த வான்கருணை

வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

                                                                                        -மாணிக்கவாசகர் 

 உள்ளப்படாத  திருவுருவை  உள்ளுதலும் .மனதால்  நினைக்க இயலாத  திருவருள்   இறைவன் .இறைவன்  ஒருவன்  இப்படி தான்  இருக்கின்றான் என்றால்  மனதால் நினைத்துவிடாலாம் .ஆனால் உள்ளத்திற்கு தெரியாதே  இறைவன்  எப்படி  இருப்பான்  என்று  ? எப்படி  நினைப்பது  இறைவனை ? . அடுத்த வரியில்  மாணிக்க வாசகப்பெருமான்  விடை  தருகின்றார்கள் .கள்ளப் படாத களிவந்த வான்கருணை , இறைவன்  எனும்  பெரும்கருணை  கொண்டோன் அவனை  யாராலும் மறைக்க இயலாது எதைக்கொண்டும்  அவனை  தடுக்கமுடியாது. அன்பாய்  கருணையாய்  கசிந்துவிடுவான் .அவன்  வருகிறான்  என்றாலே  அடுத்த  நொடியே ,உள்ளம்  பூரிக்கும்,  உணர்வுகள்  பொங்கியோங்கும் .மகிழ்ச்சி  தாண்டவமாடும் .அருள் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடும் .இறைவன்  எம்பெருமானை   நினைத்தாலே  போதும்  ,கண்களுக்கு  புலப்படாத  நுண்ணிய   கருணை  அலைகள்   தாண்டவமாடும் .கண்கள்  நீரால்  நிரம்பி  குளமாகிவிடும் அன்பும்  கருணையும்  வழிந்தோடும் .அருள் ஒளி  நிரம்பிய   வெள்ளப்பெருமான் .சாதாரண  ஓடை  ஓடுகிறது  என்றால்  பரவாயில்லை  .நல்ல  ஆர்ப்பரித்து  ஓடும்  வெள்ளம்  எப்படியிருக்கும் .இங்கே  இறைவன்  எனும்  அருள் ஒளிவெள்ளம்  ஓடுகிறது என்கிறார்  பெருமானார். அல்ல  அல்ல குறையாத  எங்கெங்கும்   எங்கு  நோக்கினும்  இறையே  அருள் ஒளியே !  இறை எனும்  வெள்ளமே  !அப்படி  பேரொளி !! பெரும்கருணை !!  பேரன்பு!!   யாவற்றையும்  சூழ்ந்து  ஆர்ப்பரித்து  அனைத்துக்கொள்ளும்  எம்பெருமான்  !! யாவருக்கும்  ஆதி மூலமல்லவா  !! யாம் எங்கிருந்தோ   வந்தோம் ,அது எமக்கு  தெரியாது ,எப்படியோ  எங்கோ  விடுபட்டுவிட்டது  எமக்கும்  இறைக்கும்  உள்ள தொடர்பு . நீண்ட நாட்கள்  தாயை  காணாது  ஏங்கிதவிக்கும்  கன்றினை போல  தவித்து  இருக்கின்றபோது ,இது போன்ற  மாணிக்கவாசகப்பெருமானின்  கருணை  வரிகள்,  இறைவனை  அவர் உணர்ந்த  விதத்தில்  என்றோ  பெருமான்  எழுதிவைத்து சென்றது  ,இன்று  நினைத்தாலும்  எம்  தந்தையை  !!எம் நாயகனை !! எம்முள்ளம்  எமை ஆண்ட தன்நிகரில்லா தலைவனை  !!எம்  உயிர் மூச்சாகிய  சுவாசத்தினை  !! பிரபஞ்சநாயகனை எம்மருகே  வாரிஅனைத்துக்கட்டிக்கொண்டு  எவராலும்  பிரிக்கஇயலாத  ஒரு பாச பிணைப்பினை  அருள் பிணைப்பினை  பெரும்கருணையினை  எம்முள்ளே  ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றது .என்ன  ஒரு வாசகம்  !! தேன்  வாசகம்  ஒவ்வொரு  துளியும்  தித்திப்பே .இறையெனும் பேரானந்தமே ..!! ஒரு சிறு  இறைத்துளி  உணர்தல்  ஒரு மாபெரும்  தவம் !! மாபெரும்  பேரமைதி !! நன்றி  நன்றி  !!கோடி  கோடி  நன்றிகள்  எம்பெருமானே  நன்றி  !! அமைதியால்  பேரானந்தத்தால் கண்ணீர் மல்க  நின் திருவடி பணிகின்றேன்  காத்தருள்வீர்களாக !!!



அகத்திய உள்ளங்களை  நீண்ட இடைவேளைக்கு பிறகு  சந்திக்கின்றேன் .இருபது ஆண்டு கால ஆன்மீக பயணம் ,யாம் சந்தித்த மகான்கள் ,எமக்கு கிடைத்த அனுபவங்கள் ,கற்றுக்கொண்ட வித்தைகள் இன்னும் இந்தநொடிகூட இயற்கை உணர்த்தும் இரகசியங்களை  பிரம்மித்து  கற்றுக்கொள்ளும்  எம் தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது .எம்மோடு   அகத்தியத்தோடு  பயணிக்கின்ற  அன்பர்கள்,நண்பர்கள்  அனைவருக்கும்  எமது  நன்றிகள் ,அவர்கள்  வாழ்வில்  அகத்திய பெருமானின் அருள்  கிடைத்து  வாழ்வு மேம்பட  இறைவனிடம்  பிரார்த்தனை செய்கின்றேன் .இந்த  அகத்திய  இதழ் வாசிக்கும்  அன்பர்கள்  ,அகத்தியத்தினால் அவர்கள்  வாழ்வில்  பெற்ற  மாற்றங்கள்  internal transformation எல்லாம் எம்மை  வியப்பில் ஆழ்த்துகிறது .ஒரு சில  அன்பர்கள்  அகத்தியம்  தமது  வாழ்வில்  ஏற்படுத்திய  மாற்றங்களை கடிதம் மூலம்  பகிர்ந்துகொண்டார்கள்.இதை என்னுள்  எழுத வைத்த இறைவனுக்கு தான் கோடி கோடி   நன்றிகள். தகுதியான  சீடர்களை  தேடி  அவர்களுக்கு  தாம்  கற்ற  ரகசியங்களை  நுணுக்கங்களை  தகுதி  அறிந்து  சொல்லி கொடுத்தவர்கள்  சித்தர்கள்.உண்மையிலேயே  தேடல் உள்ளவர்களுக்கு  இறையே  வழிகாட்டும்  ஏதேனும்  ஒரு விதத்தில் .விரைவில்  பிறவிகளை  கடந்துவிடுவார்கள் .




அதிகாலை வேலை மெல்ல மெல்ல சூரியன் இந்த  உலகத்தை  விழிக்கச் செய்ய எழுந்து வருகிறான் ,  செக்கச்சிவந்த  இளம் சிவப்பு சூரியன்   மெல்ல  மெல்ல  பருத்து அடிவானமெங்கும்  செந்நிறம் .அது  ஒரு அமைதியான  கிராமம் .இளம் காலை  என்பதால்  மனிதர்கள்  எண்ண  அலைகளின்றி  மெல்லிய  ரம்மியமான  சூழல் . அந்த கிராமத்திலே  வயது  மிகுந்த ஒரு மரம் நன்கு பெருத்த நீண்ட நெடிய மரம் .கிட்டத்தட்ட ஒரு நூறு வயது கடந்து இருக்கக்கூடிய ஒரு மரம்.மெல்லிய   காற்று அடிக்கிறது அந்த காற்றிலே மரத்தில்  உள்ள இலைகள் எல்லாம் சலசலவென  ஒரு இதமான   சப்தத்தோடு  அசைந்து கொண்டிருக்கிறது. அதை கவனிக்க  கவனிக்க  மெல்ல மெல்ல  மரம் அருகே  செல்கின்றேன் .மரத்தின்  அழகையும்  அந்த சலசலவென  இலைகளின்  ஓசையும்  ,நீண்டு பருத்த  மரமும்  ,வளைந்து  நீண்ட  நெடிய கிளையும்  வியந்து  பார்க்கின்றேன்.மரமே  எம்மை  அதன் அருகே  கொண்டுவந்துவிட்டது  என்றே  சொல்வேன் . என்னை அப்படியே அங்கேயே  கொஞ்ச நேரம் அதன்  அழகில்  எம்மை லயிக்க வைத்துவிட்டது. அந்த மரத்தின் அருகிலேயே  அமர்ந்துவிட்டேன் . 

நல்ல  சுகம்  தரும்  காற்று  .பிராணன்  எனும்  சக்தி  மிகுந்து  வருவதால்  ஒரு ஆரோக்யமான  ஈர்ப்பு  ,உடலும்  உள்ளமும்  துள்ளிக்குதிக்கின்றது .சுத்தமான  மெல்லிய  தூய்மையான காற்றினை நன்றாக உள்வாங்குகின்றேன் .என் நுரையீரல் வரை உள்சென்று சொல்ல இயலா  சுகத்தினை தருவதை  உணர்கின்றேன் .என்ன  ஒரு சுகம்டா  சாமி .நகர்புறத்திலிருந்தே  பழகிவிட்டதால்  சும்மா  அள்ளுது  இங்கே.பிராண சக்தி அதிகமாக இருக்கின்றது பிராணன்  அதிகமாக இருப்பதால் ,காற்றை   சுத்திகரிக்கும் கருவிகள் நுரையீரல் வேலை  குறைந்து மிக அற்புதமாக வேலைசெய்கிறது. ஆரோக்கியமாக இருக்கின்றது மனதால்  உள்ளத்தால்  பரமசுகம் .இலவம்  பஞ்சுபோல  எடைகுறைந்து  floating ல்  மனம் ..பாரபட்சமின்றி அளவுகடந்த   பிராண சக்தியை  அள்ளி தெளித்துக்கொண்டிருக்கின்றது  .சும்மா  கோடி ரூபா  கொடுத்தாலும்  கிடைக்காது  இது  . அரசமரம்  எனும் ஒரு அற்புத மரம் . இந்த அரச மரமும் ,அரச மரத்தின் பெருமைகளையும்  வியந்து எண்ணிப்பார்க்கின்றேன் .பட்டை இலை  வேர்  என  அனைத்துமே  பல்வேறு வியாதிகளை  சரிசெய்யும்  என எங்கோ படித்த  தகவல்கள் நினைவில்  வந்துசெல்கிறது . ஒரு மரம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்  வரை  நல்ல காற்றினை  தருகிறது அங்குள்ள  மக்களுக்கு தேவையான பிராண சக்தியை  கொடுக்கின்றது .ஒரு பத்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள ஒரு ஊர் இருக்கிறது என்றால் ஒரு பத்து அரசமரம்  இருந்தால்  போதும்  அந்த ஊரில் யாவருக்கும் தூய்மையான  ஆரோக்கியமான  காற்று   பிராண சக்தி கிடைத்து விடும். 





  அதன் அருகில் அமர்ந்து அதன் பெருமைகளில் வியந்து உள்ளம் பூரித்து அதனோடு அதன் அலைகளும் எமது அலைகளும் ஒன்றாகும் படி நானே ஒரு இணக்கத்தினை  உருவாக்கிக் கொள்கின்றேன், ஒரு அலை பரிமாற்றத்தை  உருவாக்கிக் கொள்கின்றேன்.மரத்தோடு  பேசுங்கள்  என்பது போல  உடலும்  மனமும்  மரத்தோடு  அதன் நினைவுகளாக  பூரிப்பில்  பெருமிதத்தில்  இருக்கின்றது.எமது  கைகளை  மரத்தின்  மீது  வைத்து அதன் தோள் தட்டி கொடுப்பது  போல தட்டிக்கொடுத்து மனதால்  பாராட்டுகின்றேன் . அதற்கு அந்த மரமும் நன்றி சொல்லும் விதமாக இந்தா  மகனே  நன்றாக  சுத்தமான  காற்றினை  சுவாசித்துக்கொள்  ,எவ்வளவு  வேண்டுமானாலும்  சுவாசித்துக்கொள் . எம்மை  சுற்றி  எப்பொழுதும்  ஒரு ஆரோக்கிய  ஈர்ப்பு  அலைகள்  படலம்  இருக்கின்றது .யார் வந்தாலும்  எம் மருகே  இளைப்பாறி  தூய்மையான  காற்றினை  சுவாசிக்கலாம்  எம்  சேவை தொடர்ந்துகொன்டேயிருக்கும் .நீயும்  உம்  ஆரோக்கியத்தை  வளர்த்துக்கொள்  .எனக்கு  இறைவன்  இட்ட  பணியினை  ஒரு இம்மிகூட  பிசகாமல்  அப்படியே  பணி  செய்கின்றேன்  என்று சொல்லாமல்  சொல்லி உணர்த்தி  கூடவே  ஒரு இலையை காற்றோடு  காற்றாக   எப்பொழுதோ  பெய்த  மழையில்  பாதி  நீர்த்துபோய்  ,பாதி பச்சையம்  பாதி  காய்ந்த  தன்மைகொண்ட  இலையை  காற்றோடு  காற்றாக  எம்மில்  எம்மடியில்  விட்டுச்சென்றது . காய்ந்து போன பாதி  ,ஒரு  புறம்  வெண்மை  நிறமுடைய  அதன் நரம்புகள்    , அந்த  அரசமர  இலைகள்   என்றோ   மரத்திலிருந்து விழுந்துவிட்டது. உதிர்ந்த அந்த இலையில் உள்ள பச்சையமெல்லாம்  பாதி மழை நீரில்  நனைந்தும்  காய்ந்தும்  இருக்கின்றது .ஆங்காங்கே  அந்த இலையினை  லேசாக  காய்ந்த  பச்சையத்தை  தட்டிப்பார்க்கின்றேன் . .அதனுடைய Skelton   தெரிகிறது  மெல்ல மெல்ல . வெண்மையான சிறிய துளை கொண்ட சல்லடை போல நரம்பினால்  பின்னப்பட்ட  அழகிய  வேலைப்பாடு  மிகுந்து  கண்ணை  கவர்கின்றது . பார்க்கவே  மிக அழகாக இருக்கிறது அதனுடைய  architecture ஐ பார்த்து  அசந்துவிட்டேன் பிரம்மித்துவிட்டேன் .வியந்து  வியந்து  இறைவனை  பார்க்கின்றேன் , அதனுள்  இருக்கும்  இறைவனை  இந்த    architecture படைத்த  இறைவனை  .இறைவனின்  கருணைக்கு  .எப்படி  நன்றி கூறுவது  ? இலை  காய்ந்தே  போனாலும்  ராஜா  மாதிரி  Skelton  இன்னும்  அப்படியே  இருக்கிறது .பெயர்வைத்த  சித்தர்களை  எப்படி  பாராட்டுவது  இரு கை கூப்பி  நெஞ்சம்  நிறைந்தல்லவா  நன்றி  சொல்லவேண்டும்  .போற்றி  புகழவேண்டுமல்லவா  ? இதன் பெருமைகளை  இதன்  தொன்மையினை  பாதுக்காக்கவேண்டுமல்லவா  ?.




இழந்த  நொடி  மீண்டும் வராது  .அடுத்த நொடி  இந்த பூமி  எங்கோ  தம் பயணத்தில்  சென்றுவிடும் .இன்றைய  நிலைமை  நாளை இல்லை.இது இயற்கையின்  சூட்சுமவிதி .அந்ததந்த  வினாடியில்  இயற்கை  உணர்த்தும்  ரகசியங்களை  உணர்ந்து  அப்படியே வாழ்ந்துவிடவேண்டியதே  அதி  உன்னதமான செயல்.எதிர்காலத்தினை  பற்றி  நினைக்க  பயம்  வரும் .கடந்த காலத்தினை  பற்றி நினைக்க  கவலை  சூழ்ந்துகொள்ளும் .இருக்கும்  நொடியில்  அப்படியே  வாழ்ந்துவிடுவது  கவலையும் இல்லை  பயமும்  இல்லை  ஆக வாழ்வை ரசித்து  எளிதில்  இலக்கினை  அடைந்து  ,வாழ்வை  இறையை நோக்கி  நகர்த்தும்  ஒரு அற்புத  சூட்சும  நுணுக்கம் இங்கே அடங்கியுள்ளது . ஒவ்வொரு நொடியும் அற்புதமானது இந்த உடல் அற்புதமானது.உயிர்  மிக அற்புதமானது.ஒவ்வொன்றும்  ஒரு architecture . இந்த உடலில் உயிர் சேர்ந்து இரண்டும் இணைந்து பணியாற்றுவது என்பது மிக மிக அற்புதமானது .ஒவ்வொரு நொடியிலும் மனம் எங்கெங்கோ விரிந்து சென்று கொண்டிருக்கிறது.மனம்  விரிந்து விரிந்து  எங்கோ  எங்கெங்கோ  சென்றுகொண்டிருக்கிறது  என்றால்  அப்படி  ஒன்றை  படைத்த  இறைவன்  எத்தனை  வல்லமை  உடையவன்  .பிரம்மிப்பு  ஏற்படுகிறது .  ஒவ்வொரு நொடியிலும் இந்த பூமி பயணிக்கும் தூரம் அற்புதமானது.  ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது.இன்று  இருந்த நொடியில்  பூமி அடுத்த நொடியில்  இடம் மாறிவிடுகிறது . ஒவ்வொரு நொடியும் ஒரு புது வித அனுபவமே.ஒவ்வொரு நொடியும் ஒரு அற்புத மான பயணம்.  இறை  படைத்த  உலகில்  இறையே  தன முழு  ஆற்றலையும்  உணர்ந்து  கொள்ள  தாமே தம்மை  தேடிக்கொண்ட  பயணம் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் அற்புதமான அனுபவம் .இழந்த நொடி மீண்டும் வருவதில்லை அது பயணிக்கும் தூரமும் அது எந்த பிரபஞ்ச  வெளியில்  இருக்கின்றதோ  அங்கே இருக்கின்ற  கோள்கள்,  விண்மீன்கள்,பால்வெளி  நட்சத்திரங்கள் அதன்    காலம் தூரம்  ,அதன்  அலைகளின்  ஈர்ப்பு,   ஒட்டுமொத்த  அலைகளின்  பிரதிபலிப்பு என  யாவும்  மிக அற்புதமானது எல்லையில்லா பிரபஞ்சத்தில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் மிக மிக அற்புதமானது பிரபஞ்சத்தையும் அதில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் எண்ணிப்பார்த்தால் இந்த மனம் தம்  அலை சுழல்  குறைந்து  தம்மை  அமைதியில்  ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடும் .
மன  இறுக்கம்  உள்ளவர்கள்  ஒரு depression  எப்பப்பார்த்தாலும்  முகத்தில்,  ஒருவித  கவலை , ஒரு வித  சோகம், இவர்களெல்லாம்  கையில் உள்ள  செல்போன்களை  அப்படி  மூடிவைத்துவிட்டு ,மனிதர்களிடமும்  மரங்களிடமும்  செடி கொடி பூக்கள்  இவைகளிடம்  கொஞ்சம்  இன்முகத்தோடு   பேசுங்கள் .இயற்க்கையை  ரசிக்க  கற்றுக்கொள்ளுங்கள்   காலாற  நடந்து கொஞ்சம்  அரசமரத்தை  அதி காலை  வேளையில்  போய்  பாருங்கள்.ஒரு அரைமணிநேரத்தில்  ஒன்னும்  கொறஞ்சுபோகாது.இங்கே  செலவழிக்கும்  நேரம்  ஆரோக்யத்தை  மேம்படுத்தும் . நெஞ்சார  நன்றி  சொல்லுங்கள் .இவை  படைத்த  இறைவனை எண்ணுங்கள் அவனின்  அறிவு  பேரறிவு  எவ்வளவு  பெரியது  என்று  எண்ணி  எண்ணி    போற்றுங்கள்.கொண்டாடுங்கள்  உங்கள் மனதுள்  இறைவனை .முடிந்தால்  வரும் தலைமுறை  ஆரோக்கியத்தை  மனதில்  கொண்டு  எங்கேனும்  இது போன்ற  மரங்களை  நடுவதற்கு  முயற்சி செய்யுங்கள் .உங்களால்  உங்கள் தலைமுறை  நல்ல காற்றினை  சுவாசிக்கும் . 


ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு 20 பேர்களுக்காவது  நன்றி சொல்ல வேண்டும் .அதிகபட்சம்  கணக்கில் அடங்காதது .அந்த அளவுக்கு  நாம்  பிறரின்  உழைப்பை  கிட்டத்தட்ட  உறிஞ்சி   பயன்படுத்துகிறோம் . உண்ணும்  உணவு முதல் உடுத்தும்  உடை  ,இருக்கும்  இடம்  என  பயன்படுத்தும்  அனைத்தும்  பிறரின்  உழைப்பால் .பிறரால்  மட்டுமே  இவைகளை  தர  முடியும் .  படைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.ஒவ்வொரு  வினாடியும்  இறைவனுக்கு  உள்ளம் மிகுந்து  நன்றி சொல்லவேண்டும்.எதையுமே  கண்டுகொள்வதில்லை  .ஒரு கருவியை  இழந்த பிறகு  தான்  அதன் பெருமை தெரியவரும் விலைமதிப்பில்லாத  இறைவனின்  கருணை புரியவரும் .ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு பிறகு  அளவுக்கு  அதிகமான  load லால்  கருவிகள்  செயல் இழக்கும்  போது  ,அதற்கான  மருத்துவரை  நாடி  treatment  எடுக்கும்  போது  தான்  தெரியவரும்  , என்ன இவ்வளவு  பணமா  கொடுக்கவேண்டும்  ?அப்படியே கொடுத்தாலும்  இயற்கையில்  இறைவன்  படைத்த quality  வருமா  என்றெல்லாம்  கேள்விவரும் .ஒரு நாற்பது  வயது  வரை  இதை பற்றியெல்லாம்  சிந்திக்கக்கூடநேரமில்லை  .காலாற  நடப்பது , சிரமம்  இல்லமால்  ,இயல்பாக  சுவாசிப்பது ,கண்குளிர  தெள்ளத்தெளிவாக  இயற்க்கை  காட்சிகளை  பார்த்து  ரசிப்பது ,உணவினை  சுவைப்பது  வாசனையை  நுகர்வது  ,பிரச்சினை  இன்றி  இயற்கை  உபாதைகளை  கழிப்பது  ,இவை எல்லாம்  நடக்கிறதென்றால்  இதை படைத்த  இறைவனுக்கு  காலமெல்லாம்  நன்றி  சொல்லவேண்டும் . இறைவனுக்கு  ஒரு பைசா  கூட  கொடுக்காமல்  என்னுள்ளே  எவ்வளவு  கருவிகள்  வைத்திருக்கின்றார் அதை  எவ்வளவு  அற்புதமாக  செயல்படுத்திக்கொண்டிருக்கின்றார்  ஒன்றை  பற்றி  சிந்திக்கும்  போதே  அதன் சம்பந்தமான  அத்தனை  எண்ணங்களையும்  நிகழ்வுகளையும்  ஒரு கம்ப்யூட்டர்  செயல்படுவது போல  செயல்பட்டு  அதைவிட  இன்னும்  துல்லியமாக நொடியில்  அள்ளி  தெளிக்கிறதல்லவா  ?இந்த  திறமையை  இந்த நுணுக்கத்தை  எம்முள்  படைத்தது  யார்  ? இந்த  systematic  programming  செய்தது  யார் ?  ஒவ்வொரு உறுப்பும் அதன் செயல்படும் விதமும்  பிரம்மிக்க  வைக்கிறது . அழகு!!!  அழகு!!! உன்னதம்  !!  இறைவனின்  படைப்பில்  அத்தனையும்  அழகு . உணவினை படைத்த இறைவனுக்கு நன்றிகள்  கோடி .அதை  உண்பதற்க்கு  ஏற்றவாறு  இதமாய்  பதமாய் ஆக்கிய அன்பருக்கு  நன்றி அதில்   எந்தவிதத்திலாவது  ஏதேனும்  ஒரு வகையில்  பங்களிப்புச்செய்த  அன்பர்கள் நண்பர்கள் என  யாவருக்கும் நன்றி  கூறவேண்டும் .ஒரு அரிசியை  எடுத்தால்   அதை படைத்த இறைவன்  ,விதை விதைத்து  நெல்மணியாய்  வளர்த்தெடுத்த  விவசாயி ,அதை  எனக்கருகே  கொண்டுவந்தவர்கள் ,அதை  உண்ணும்  விதத்திற்கு  சமயலாய்  படைத்தவர்கள் , உண்ட பிறகு  அதை செரிமானம்  செய்யும்  உடற் கருவிகள்  ரசமாய்  ,ரத்தமாய்  ,மாமிசமாய் ,கொழுப்பாய்,எலும்பாய்  ,எலும்பு  மஜ்ஜையாய்  உடலுள்ளே  மாற்றி  மாற்றி  இவ்வளவு  பெரிய  உடம்பிற்கு  அங்கே  ஒவ்வொரு செல்லுக்கும்  ஆற்றலை  கொண்டுசெல்லும்   செல்லும்  அதி நுண்ணிய  திறம் எண்ணி  எண்ணி  வியந்து  ,மனதால் உள்ளம் பூரித்து நன்றி சொல்லுங்கள்.ஒவ்வொரு  உறுப்பிற்கும்  நன்றி சொல்லுங்கள்.  எல்லாவற்றையுமே பிறரிடமோ அல்லது   சமுதாயத்திடமிருந்து வாங்கி பயன்அடைந்துவிட்டு  அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற ஒரு உணர்வு கூட இல்லை என்றால்   கர்மா  எனபது  கூடிக்கொண்டேதானே  போகும். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடையிலிருந்து அத்தனை பேருக்கும்  நன்றி  சொல்லவேண்டும்.இப்படி நன்றி சொல்ல சொல்ல  நம் கர்ம வினைகள்   தாக்கம் என்பது குறைந்து கொண்டே போகும்  ஏனெனில்  அங்கே கோடிக்கணக்கான உயிர்களின் பங்களிப்பு இருக்கிறது.நன்றி!!   நன்றி!! என இருகரம்  கூப்பி  நன்றி  சொல்லுங்கள்  உங்கள்  வாழ்வு  அடுத்தகட்ட  நிலைக்கு  மேம்படும் .!அன்றைய  நாளில்  நாம்  சந்திக்கப்போகும்  அன்பர்கள்  நண்பர்கள்  ,நாம் மேற்கொள்ளும்  தொழிலில்  செயலில்  பங்கெடுக்கும்  அனைவருக்கும்  வீட்டிலிருந்து  கிளம்பும்  முன்னே  நெஞ்சார்ந்த  நன்றிகள்  சொல்லி கிளம்பி  பாருங்கள்  ,அன்றைய  நாள்  மிக சுமூகமாக  கழிந்துவிடும் .நமது  வேலையும்  சுமுகமாக  மாறிவிடும் .



சகல  சாஸ்திர  ஞானம்  கொண்டவர்  குரு .யாம்  எம் குருவை  எண்ணும்  போதே , எம்மை  பற்றி  அனைத்தும் அறிந்தவர் . பேசாமலே,  பார்க்காமலே  ,எமக்கு  என்ன  பிரச்னை  அதற்கு  தீர்வு  என்ன என்பதை அறிந்தவர்கள் .இன்று  எவனெல்லாம்  இங்கு வருவான் அவர்களுக்கான  தீர்வு  என்னென்ன  என்பதையெல்லாம் ஞான திருஷ்டியில் அறிந்தவர் குரு .  ஒரு நொடியில்  அனைத்தையுமே  உணர்ந்து  விடுவார்.ஆயிரம்  ஆயிரம்  ஆயிரம்  ஆண்டுகள்   பழமை யானவர்கள் , தொன்மை  நிறைந்தவர்கள்  இன்றும்  வாழ்ந்துகொன்டேயிருக்கின்றார்கள்.அன்பும்  கருணையும்  நிறைந்தவர்கள். அன்பால்  உப்பி  பெருக்கெடுக்கும்  கருணை  நிறைந்தவர்கள்  .இந்த மானுட குலம்  செழித்து  வாழ்வாங்கு  வாழ  கோடிக்கணக்கான  சாஸ்திர  நுணுக்கங்களை வழங்கியவர்கள் .இன்றும் வழங்கிக்கொண்டேயிருக்கின்றார்கள் . இன்னும்  இன்னும்  இறையின்  படைப்பில்  உள்ள  அதி நுட்பங்களையும்  ஆராய்ந்துகொண்டேயிருக்கின்றார்கள்.இறைவன்  கொடுத்த  வாழ்நாட்களை  கொஞ்சம் கொஞ்சமாக  நீட்டிக்கொண்டே  செல்லும்  வித்தைகள்  தெரிந்தவர்கள் .


அதிகாலை எழுந்த உடனே இன்று என்ன சரம் ஓடுகிறது இன்று என்ன மூச்சு எந்த புறம் ஓடுகிறது என்பதை வைத்து அந்த நாள் முழுதும் எப்படி இருக்கும் ? இன்று  யாம்  செய்யப்போகும்  செயல்கள்  யாவும்  எப்படி  எமக்கு  சாதகமான  பயன்படுத்திக்கொள்ளவேண்டும்  என்பது  பற்றியம்  நுணுக்கங்கள்பற்றியும்   பேசும் ஒரு கலை   சரசாஸ்திரம்.அதுபோல  வைத்திய சாஸ்திரம் , வான சாஸ்திரம் என  நீண்டுகொண்டே யிருக்கும் அனைத்து சாஸ்திரங்களையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்ற  expert  ! genius ! சித்தர்களுக்கு  .
ஒவொரு நொடியும்  நன்றி  சொல்லவேண்டும் .இவர்களை  போற்றி புகழ்ந்து  கொண்டாட வேண்டும் .அகத்தியர்  பெருமான்  என்ற உடனே எமக்கு  அன்பு பெருக்கெடுக்கின்றது ..அன்பு  என்றால்  என்ன அதன் மூலமான  சூட்சுமமான  ஆற்றல்  என்ன  என்பதை  நேரடியாக  எம்மை  ஒரு சூட்சும  travel  செய்து  புரியவைத்த  ஒரு மாபெரும்  சித்தருக்கெல்லாம்  சித்தர் .கண்களில்  கண்ணீர்  மல்க இன்றும்  என்றும் என்றென்றும்  நன்றிகள்  கூறிக்கொண்டேயிருப்பேன் .
அகத்தியர் பெருமானை நினைக்கின்ற  போதே கருணை  குடிகொள்கிறது .எவ்வளவு  ஞானம்.எப்படி இத்தனை  நுணுக்கங்கள்  கற்றுக்கொண்டார்கள் .  ..சாதாரண  இந்த நிலத்தை பார்த்தால்  இதன் போன பல தலைமுறைகளில்   . முந்தைய  நிலை என்ன  இந்த நிலம் எப்படி இருந்தது .வளம் கொழிக்கும்  பூமியா? அல்லது  சுடுகாடா  ?  இது வாழ்வதற்கு  ஏற்ற நிலமா  இதில் வீடு காட்டலாமா  ? ..இனிமேல்  எப்படி இருக்கும்  என  அதி நுண்ணிய  நுணுக்கம்  எல்லாம் தெரிந்தவர்கள் ..நாள் தோறும்  போற்றவேண்டும்   போற்றிக்கொண்டேயிருக்கவேண்டும் .நம் மண்ணின்  பெருமை அது .உலகத்திலே  கோடான  கோடி  இடமிருக்க  இந்த தென்பகுதியை  தேர்ந்தெடுத்து  அங்கே அதிசயம்  ஆயிரம்  ஆயிரம் நிகழ்த்திக்கொண்டேயிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு  உயிரும்  ஒரு மாபெரும்  பொக்கிஷமாக தானே  இறைவனால்  படைக்கபெற்றிருக்கின்றது .ஒவ்வொரு  உயிரும்  அதி  உன்னதம்  .தசவாயுக்கள்  ,72000 நாடிகள்  ,ஐந்து  ராஜ உறுப்புக்கள் ,அழகான  கண்கள்  etc  etc  சொல்லிக்கொண்டேபோகலாம்.ஒவ்வொரு  உறுப்பும்  அதி அற்புதமாக  தமக்கு  இட்ட  கட்டளையை  ஏற்று  மிக  அருமையாக  வேலைசெய்கின்றது ..படைப்பால்  அனைத்தையும்  சமமாகவே  படைத்திருக்கின்றான் இறைவன் .தரையில்  அமர்ந்து  உண்ணுவது  ,விரைவில்  தூங்கி  ,பிரம்மமுகூர்த்த  வேளையில்  எழுவது ,இந்தியன்  டாய்லெட்  மாடல்  பயன்படுத்துவது ,யோகாசனம்  செய்தல் ,பசித்தால்  மட்டுமே உண்ணுவது , போன்ற  தொன்று தொட்டு நம் முன்னோர்கள்  சொல்லிவந்த  day  to  day   activity etc  இவையெல்லாம்  Ever Golden  Words  .இதன் பயன்கள்  அடிபடும்போதுதான்  தெரியவரும் . 

இறைவன்  படைப்பில்  அனைத்துமே  சூப்பர் ! இந்த மனம்  அதைவிட  டாப் சூப்பர் .என்ன  ஒரு  படைப்புத்திறமை. இங்கேயிருந்து  நொடியில்  சந்திரமண்டலம்  வரை போய்  வரலாம் .எனது கற்பனை  திறனில்  நானே  ராஜா  ! ஒரு பய  உள்ள வர முடியாது.இங்கு நான்  படைப்பதே அதி சிறந்தது .என்ன  ஒரு அழகான  மேடை  இதை எப்படியெல்லாம்  பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .என்றும்  நறுமணம்  வீசும்  புத்தம்  புது  நந்தவனமாகவும்  வைத்துக்கொள்ளலாம் .இல்லை நான் வேறுவிதமாக இப்படி  தான்  வைத்துக்கொள்வேன்  என்றாலும்  அதற்கும்  உள்ளே உள்ள  இறைவன் உதவுகிறான் . 

இங்கே தானே  .காவியம்  படைத்தனர் மாமேதையெல்லாம் .இங்கு தானே  அகத்தியம்  உருவானது  இதில் தானே  எத்தனை  அன்பர்கள்    எழுதினார்கள்  "இறையில்  மூழ்கினேன்  என்று ...."ஆக்கத்துறையிலே  மனம்  பயன்படுத்தவேண்டும்  என்கிறபோதே  மனம்  நன்கு  வலிமை  பெற்றுவிடும் . புதுப்பொலிவு  பெரும் .மஹாலட்சுமி  தன்மை  குடிகொள்ளும் .சோம்பேறித்தனம்  வெளியேறிவிடும் .சரஸ்வதி  நாவில்  எண்ணத்தில்  விளையாட  ஓடோடிவருவாள்.அட்சர  சுத்தமாக   சும்மா  உருட்டிவிட்ட ஸ்படிக  மணிகள்  போல வார்த்தைகள்  வந்து விழுகின்றதென்றாலே  சரஸ்வதியின்  ஆசிகள்  இருக்கின்றது  என்று பொருள். எமது  வாழ்வில்  ஒரு சிலரை  சந்தித்திருக்கிறேன்  அவர்கள்  படிப்பறிவு  இல்லாதவர்கள்  சாதாரணமான வாழ்வை  நடத்துபவர்கள் ஆனால்  அவர்கள்  முகத்தில்  இருக்கின்ற  மலர்ச்சி  அவர்கள்  நாவில்  வந்து விழும்  வார்த்தைகள்  கண்டு  வியப்பில்  ஆழ்ந்திருக்கின்றேன் .எப்படி இப்படி  ஒரு நிம்மதியான  நிறைவான மனம்  .புன்னகை  பூக்கின்ற  முகம் .அட்சரசுத்தமாக  வரும்  வார்த்தைகள்.சரஸ்வதியும்  மகாலட்சுமியும்  வெறும்    படிப்பறிவோ  பணமோ அல்ல .மஹாலட்சுமி  என்பது  நிறைவுத்தன்மை .முகத்தில்  என்றும்  ஒரு வித  மகிழ்ச்சி  அல்லது  ஒரு மெல்லிய  இன்முகம் இருந்தால்  அவர்களிடம்  சகஸ்ராதாரம்  எனும்  சக்கரம்  நன்கு  இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது  உண்மை  .யாருக்கெல்லாம்  சகஸ்ராதாரம்  இயங்குகிறதோ  அவர்களெல்லாம்  ஒரு வித மகிழ்ச்சியில்  பேரானந்தத்தில்  இருப்பார்கள் .







ஆர்ப்பரித்து  துள்ளிகுதிக்கும்  அருவி போல  மனம்  என்றும்  புதுமையில்  மகிழ்ச்சியில்  இருக்கவேண்டும் .என்றும்  பிரெஷ்  .புத்தம் புது  வாசல்  புத்தம் புது  நிகழ்வுகள்  புத்தம் புதிய தருணங்கள்.புதிய சிந்தனைகள் என்பது  போல  எல்லாமே  பிரெஷ் .மகிழ்ச்சியில்  என்றும்  துள்ளிக்குதிக்கவே  இந்த மனம் .ஆர்ப்பரித்து  துள்ளிகுதிக்கும்  மனம்  என்பது  அம்பாளின்  சக்தியின்  ஒரு  இயல்பு  நிலை.எல்லாம்  என்னுள்ளே  தான்.அம்பாளும்  இங்கே தான் ,சிவமும்  இங்கே  தான்.இறைவனின்   ஒரு miniature  படைப்பு  தானே  இந்த  மானுடம் . இடகலை  சுவாசம்  அம்பாள்  தன்மை  .பிங்கலை  சுவாசம்  சிவனின்  தன்மை .இடது  சுவாசம்  என்றுமே  விருத்தி  செய்யக்கக்கூடியது  .இடது  சுவாசித்தல்  சக்திவழிபாடு  மந்திரங்கள்  சொல்வது  ஸ்லோகங்கள்  சொல்வது  என எல்லாம்  பலனை  பன்மடங்கு  பெருக்கி  விருத்தியாகிக்கொண்டேயிருக்கும் .பிங்கலை சுவாசம்  சிவனின்  தன்மை  எதையும்  முடிக்கும்  தன்மை  கொண்டது .இருபுறமும்  ஓடும் சுவாசம்  சுழுமுனை  அர்த்தநாரி.அக்னியின்  தன்மை   .மிகக்கவனமாக  இருக்கவேண்டும்  இது போன்ற சுவாசம்  நாம் செய்த புண்ணியத்தால்  இறைவன்  நமக்கு  தரும்  சிறந்த பொக்கிஷம் .இது போன்ற  சுவாசத்தில்  எல்லாவற்றையும்  தூக்கியெறிந்துவிட்டு  அமைதியாக  மூச்சினை  கவனிக்க  இறையை நோக்கி  ஜோதியை  நோக்கி  ,நம்முள்ளே  இருக்கும்  சுடர்விட்டு  ஆடிக்கொண்டிருக்கும்  நடராஜனை,  நாட்டியமாடும்  ஜோதியை  காண்பதற்கு அழைத்துச்செல்லும் .இதில்  இன்னும்  நுணுக்கமாக  ஆழ்ந்து செல்ல  செல்ல பிறப்பறுக்கும்  சூட்சுமத்தை  உணரலாம் . எப்பொழுதெல்லாம்  சுழுமுனை  சுவாசம் ஓடுகிறதோ  அப்பொழுதெல்லாம்  அது உடலில்  நல்ல சூட்டினை  உருவாக்கும் .இந்த  நல்ல  சூடு  நமது உடலில்  இம்முயூனிட்டி சிஸ்டம்  உருவாக்கும் .இதை  படிப்பவர்கள்  புண்ணியம்   செய்தவர்கள் .அவர்களால்  மட்டுமே  இதை உணர்ந்து  பயன்படுத்திக்கொள்ளமுடியும் .கர்மா  அதிகமாக  இருந்தால்  நுனிப்புல்  மேய்வது போல இதையெல்லாம்  காதிலேகூட   வாங்கிகொள்ளமுடியாது.


ஒவ்வொரு நொடியும் அற்புதமானது இந்த உடல் அற்புதமானது.உயிர்  மிக அற்புதமானது இந்த உடலில் உயிர் சேர்ந்து இரண்டும் இணைந்து பணியாற்றுவது என்பது மிக மிக அற்புதமானது .ஒவ்வொரு நொடியிலும் மனம் எங்கெங்கோ விரிந்து சென்று கொண்டிருக்கிறது.மனம்  விரிந்து விரிந்து  எங்கோ  எங்கெங்கோ  சென்றுகொண்டிருக்கிறது  என்றால்  அப்படி  ஒன்றை  படைத்த  இறைவன்  எத்தனை  வல்லமை  உடையவன்  .பிரம்மிப்பு  ஏற்படுகிறது .  ஒவ்வொரு நொடியிலும் இந்த பூமி பயணிக்கும் தூரம் அற்புதமானது.  ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது.இன்று  இருந்த நொடியில்  பூமி அடுத்த நொடியில்  இடம் மாறிவிடுகிறது . ஒவ்வொரு நொடியும் ஒரு புது வித அனுபவமே.ஒவ்வொரு நொடியும் ஒரு அற்புத மான பயணம்.  இறை  படைத்த  உலகில்  இறையே  தன முழு  ஆற்றலையும்  உணர்ந்து  கொள்ள  தாமே தம்மை  தேடிக்கொண்ட  பயணம் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் அற்புதமான அனுபவம் .இழந்த நொடி மீண்டும் வருவதில்லை அது பயணிக்கும் தூரமும் அது எந்த பிரபஞ்ச  வெளியில்  இருக்கின்றதோ  அங்கே இருக்கின்ற  கோள்கள்,  விண்மீன்கள்,பால்வெளி  நட்சத்திரங்கள் அதன்    காலம் தூரம்  ,அதன்  அலைகளின்  ஈர்ப்பு,   ஒட்டுமொத்த  அலைகளின்  பிரதிபலிப்பு என  யாவும்  மிக அற்புதமானது எல்லையில்லா பிரபஞ்சத்தில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் மிக மிக அற்புதமானது பிரபஞ்சத்தையும் அதில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் எண்ணிப்பார்த்தால் இந்த மனம் தம்  அலை சுழல்  குறைந்து  தம்மை  அமைதியில்  ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடும் .

இந்த சிவராத்திரி வேளையிலேயே  எங்கும்  எங்கெங்கும்  சிவதாண்டவ  அலைகள்  துள்ளிக்குதிக்கின்றது .அமைதியில்  அமர்ந்து  ஆழ்ந்து  ஏதேனும்  ஒரு சிறு இறை துளியை  பிடித்து  அதிலே  மீண்டும்  செல்ல இறைவன்  விரைவில்  ஆர்ப்பரித்து  சூழ்ந்துகொள்வான் .அகத்திய  உள்ளங்கள்  அனைவருக்கும்  இறைவன்  தன்  ஆசிகளை  வழங்கவேண்டும்  என்று  பிரார்த்தனை  செய்கின்றேன் இந்த அற்புதமான வேளையிலே .போகர்ஐயா   அருள்கிடைக்கப்பெற்ற    ஒரு நிகழ்வு  , இன்னும்  சக்தியின்  தத்துவத்தினை   நாம்  நம்முள்  எவ்வாறு  உணர்ந்துகொள்வது ,அதை  எப்படி  நமக்கு  நம்  வாழ்க்கைக்கு  வெற்றியளிக்கும்  வகையில்  பயன்படுத்துவது  என்பதையெல்லாம் இறை வாய்ப்பளிக்கும்  பொழுது  வரும் கட்டுரைகளில் எழுதுகின்றேன் .

வாழ்க வளமுடன்  !!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா !!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா !!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்