யாமெனும் இறை II !!




ஆழ்ந்து  ஆழ்ந்து எம்முள்ளே எம்  உள்ளத்துள்ளே  நீண்ட  நெடிய  பயணம்  ஒன்றை  மேற்கொண்டு  பயணிக்கின்றோம்  ,பிரம்மமாய்  ஆதியாய்  ஜோதியாய்  இருக்கும்  நின்  அற்புத  தரிசனம்  காண  வியல்கின்றோம்  இறைவா .நிமிடங்களும்,நாட்களும் ,வருடங்களும்  கடந்து  ஓடுகிறது .இப்பிறவியே  சென்றாலும்  மீண்டும்  மீண்டும்  தொடருவேன் எம்  பயணத்தினை ..நினை  காண நின் தரிசனம்  பெற  நின் திருவடி  ஒன்றே  கதி  எமக்கு  .நின்  சிறு பிம்பம்  யாம்    இதை  உன்னில்  கலக்க  யாம்   இருப்பதை பரிபூரணமாக  உணருகின்றோம் எம்பெருமானே  !! தூய ஒளியே !! மாபெரும்  சர்வ வல்லமை  கொண்டோனே  !! அணு முதல்  பேரண்டம்  வரை  ஊடுருவி  இமைப்பொழுதில்  எல்லாம்  ஒன்றாய்  அறியும்  திறன் கொண்ட  திவ்ய  பிரம்மஸ்வரூபமே .!!! நின் கருணை  இல்லா   உயிர்  ஏது  .நின் அருள் அலை ஊடுருவ  இயலாத இடம்  ஏது  இப்பிரபஞ்சத்தில் . எங்கெங்கும்  நின்  படைப்பில்  அன்பும்  கருணையும்  நிறைந்துள்ளது .ஒன்றை  மற்றொன்றாய்  மாற்றிக்கொண்டேயிருக்கும்  நின்  மாபெரும்  இந்த நுட்பம்  நிறைந்த  அற்புத  திறமையினை எண்ணி எண்ணி நின்  பெருமை கண்டு வியந்து நிற்கின்றோம்  பலமுறை .ஆருயிர் தந்த  மகா தேஜஸ்வரூபியே ..!!! என்றும்  நின் திருவடியில்   சராணாகதி  !!  சராணாகதி!!சராணாகதி !!


மாபெரும்  பிரம்மத்தின்  சிறு ஸ்வரூபமே  எம்  ஆத்மா  எனும்    நிலையை  அடிக்கடி நினைவு படுத்தி , பேராற்றல்  மிக்க தூய ஒளியோடு   தம்முடன்  எப்பொழுதுமே  ஒரு இணைப்பு  இருக்கின்றது என்பதை என்றுமே மறவாமல்  மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி ,உற்சாகத்தோடு அதன் பூரண ஆற்றல் எம்முள்ளும்  இருக்கின்றது என்பதை  கொஞ்சம் கொஞ்சமாக  நெஞ்சத்தில் உரு ஏற்றி உணர  முயல , இறை உள்ளத்தை  ஆட்கொள்கிறது ,பெருங்கருணை உடையோனின் பேரானந்த  அலைகள் கொஞ்சம்  கொஞ்சமாக  உள்ளத்தில் கசி கிறது .அன்பின் அலைகள்  பெருக்கெடுக் கிறது .அறிவு  செயல்பாட்டிற்கு  வந்து  மாயை  அகல்கிறது .ஒரு முழுமை  தன்மையை தருகிறது . ஒரு நிறைவு  தன்மையை  வழங்குகிறது  .தேவையற்ற  குதர்க்கமான சிந்தனைகளையும் பயங்களை ஓட ஓட  விரட்டி  தூக்கியெறிந்துவிடுகிறது  .மகிழ்ச்கியையும்  ஞானத்தையும்  நிலைநாட்டுகிறது .ஆன்மாவிற்கு  ஞானபலத்தை அதிகப்படுத்துகிறது . எவன் ஒருவனுக்கு  ஆத்மா பற்றிய ஞானம் இருக்கின்றதோ  அவனே   புலன்களின் இச்சைகளை  கடந்து  விரைவில்  மோக்ஷம்  நோக்கி செல்கிறான் .ஞானபலம் நிறைந்தவன் மாயை   வென்றவன் ஆகிறான். பிறந்த  ஊரை விட்டு  எந்த அந்நிய  தேசம் சென்றாலும்  அவனை  தனிமை  வாட்டாது .ஞானம் அவனுக்கு  சுகம்  தருகிறது .மனதிற்கு  வலிமை  தருகிறது.பிரம்மத்தை  கெட்டியாக  பிடித்துக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்பது  அவசியமாகிறது .


  ஏழரை நாட்டு சனி .சும்மா  புகுந்து  விளையாடி விடும் .வாழ்க்கையை   சில சமயங்களில் சின்னாபின்னமாக்கி விடும் .என்னசெய்வதென்றே  தெரியாது ..நிம்மதி  சுத்தமாக இருக்காது   கர்ம வினை  அனுபவிப்பது  என்பது  ஒரு மிகப்பெரும்  வேதனை .கண்டிப்பாக  மீள   வழி இருக்கிறது என்பதை  நீங்கள்  ஆணித்தனமாக  நம்பிக்கை கொண்டு  மனதினை  ஸ்திரத்தன்மையோடு இருக்க  பழகிக்கொள்ளவேண்டும் .முயற்சிகள்  தேவை ,அதை  நீங்கள்  தான்  முயற்சிக்க வேண்டும்.விதியின்  விளைவுகளை அனுபவிப்பது  என்பது  கொடுமையானது  ஆனால்  மதிகொண்டு  வெல்வது  என்பது  கடினமே  ஆனாலும் முயற்சி  மட்டும்  தொடர்ந்து  செய்துகொண்டேயிருக்கவேண்டும் .அதாவது  போராடிக்கொண்டேயிருக்கவேண்டும் ,இந்த  போராட்டம்  இறைவனின்  பார்வை  விழும்  வரை  தொடர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் .என்றாவது  எப்பொழுதாவது  இறையின்  பார்வை  விழுந்தே  தீரும்  எனும்  நம்பிக்கை  கொண்டு முயற்சியை  தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும் .99.99% முயற்சியில்   இறையின்  பார்வை  விழாவிட்டாலும்  ,எஞ்சிய  .01%  ல்  கண்டிப்பாக  இறையின்  பார்வை எவர்  மூலமாகவோ  எதன்  மூலமாகவோ  வந்தே  விழும்  என்பது  யாம்  உணர்ந்த  உண்மை. முயற்சியை  தொடருங்கள்  ,இறைவனின்  பார்வைக்கு  எடுத்துச்செல்வது போராடும் முயற்சியே .எத்தகைய  கடினமான  காலமாக  இருந்தாலும் தொடர்ந்து போராடுதல் .கடின  உழைப்போடு  கூடிய  முயற்சிகள்செய்தல்   யாவும் ,இறைவனின்  கருணை பார்வையை  எட்டக்கூடிய  மிக சூட்சுமமான  ரகசியங்கள் .இறைவனின்  தார்மீக   பார்வை  பட்ட உடனே   பூமழை  தூவியது  போல  ,தீர்வுகள் கிடைத்துவிடும் . போராடி  முயற்சி  செய்யவில்லை  எனில்  இறைவனின்  ஆசி கிடைப்பதில்லை   எனில்  விதி  வேலை  செய்துவிடுகிறது.  




ஜன்ம  ம்ருத்யு  ஜரா  தப்த  ஜந  விஸ்ராந்தி  தாயி நீ .......

பிறப்பு ,மூப்பு ,இறப்பு  இப்படியே  வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியே  ஓடி ஓடி  பிறவிகள் கடந்து  பிறகு ஜென்மா எடுப்பதும் , புலன்வழி  சென்று  அடிமையாகி  மூப்பினை எடுத்து ,பின்பு  இறப்பதும்  தொடர்ந்து வண்ணம்  இருக்கின்றது .   என்று  தான்  இதற்கு  ஒரு முற்றுப்புள்ளி .பிறப்பிற்கும்  இறப்பிற்கும்  ஒரு  விஸ்ராந்தி (ஓய்வு )தேவைப்படுகிறது  .அந்த  ஓய்வினை  அளிப்பவள்  தாய் .எப்படி  அளிக்கின்றாள் . புலன்  செல்லும் மனதிற்கு  கடிவாளமிட்டு  அதனை  தடுக்கின்றாள்.இந்திரியங்கள்    வழி இழுக்கும்  மனதினை  அதன்  மூலம் உணரவைக்கின்றாள் .புலன்வழி  மனம்  செல்வதால்  பெறும்  ஆற்றலெல்லாம் வீணாகி  பிறப்பும்  இறப்பும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.கண்களை  மூடி  மந்திர ஜபம் செய்தாலோ  அல்லது  தியானம்  செய்தாலோ அல்லது எதை செய்தாலும்  எங்கோ  மனம்  இழுத்துச்செல்கிறது .மாயையை  நோக்கி  செல்கிறது. ஆற்றலை துவம்சம்  செய்கிறது.மனம் ஸ்திரத்தன்மையோடு இல்லையெனில்  செய்வதெல்லாம் வீண் .இதிலிருந்து எப்படி  மீள்வது  ? மாயையை  உருவாக்குபவளே அம்பிகையே ..சக்தியே . சக்தியே  மாயையை உருவாக்குகிறது . சக்தி வழிபாடு  மாயையை  வெகு விரைவில்  அகற்றிவிடும் .இதற்கு  ஒரு  அருமருந்து  ஸ்ரீ  லலிதா  சகஸ்ரநாம  பாராயணம்..தவம்  சித்தியாகவேண்டுமாயின்  புண்ணிய  பலன்கள் வேண்டும் ,எல்லாரும்  வாசியோகமோ  அல்லது  வேறு ஏதேனும் ஒரு யோகாமோ  பயில்வதால் அந்த யோகத்தில்  சித்தியடைய  அவ்வளவு எளிதில் இயலாது .அதற்கு  முதலில்  பூர்வஜென்ம  புண்ணியம் வேண்டும்  அல்லது  இப்பிறவியிலாவது  புண்ணியம்  செய்திருக்கவேண்டும் . அந்த புண்ணியம்  தருவது   தாயவளின்  நாமங்களை  உச்சரிப்பதால் .லலிதா சகஸ்ரநாம  பாராயணத்தால்  ,மாயை அகன்று  ஞானம் பிறக்கிறது .புண்ணியம்  தர்மம்  எனும்  விதைகள்  விதைக்கப்படுகின்றன. 



ஹ்ரீம்காரி  எனும்  அம்பாளின்  பாதங்களை  சரணடைய  மாயையை  மனதினை  விட்டு அகற்றும் வழிகிடைக்கிறது .தூய  பேரொளி போல்  தகதகவெனும் மின்னிடும்  அன்று பூத்த செக்கச்சிவந்த செந்நிற  செம்பருத்தி பூவை போன்ற  நிறமுடைய  மென்மையிலும் மென்மையான வதனம் உடையவளின்   பாதங்கள் பட்ட  மண்ணின் துளிகளை  வணங்கிட ஏலேழு ஜென்ம கர்மவினையும் தாண்டி  முக்தியை அருளிடுவாள்.செம்பருத்தி  பூவை  ஒருமுறை  பாருங்கள்  இதன்  செந்நிறம்போல   ஒரு நிறம் , அப்படிப்பட்ட  வதனம் கொண்டவள் எப்படி இருப்பாள்  என்பதை  கற்பனை  செய்துபாருங்கள் .அப்படிப்பட்ட  நிறமும்  அழகும்  அலைவடிவில் ஒரே சேர அம்பாளின் திருவுருவமாக அமையப்பெற்று  அழகினும்  அழகாக  காட்சியளிக்கிறாள்  என்று  ஆதி சங்கரர்  எனும்  மாபெரும்  மகான் பாடலாக  எழுதியுள்ளார்கள் .இப்படி  ஒரு நிறத்தை  அழகை  எப்பொழுதாவது  செம்பருத்தி  பூவை  பார்க்கும்  போது கற்பனை  செய்து  அதை  அம்பாளுக்கு  சூடுங்கள்.மனம் அமைதி பெரும் .மாயையை வெல்லும்  வழிகிடைக்கும் விரைவில் .

வறுமையும்  தரித்திரமும்  புண்ணியத்தின்  குறைபாடே . தர்மம்  செய்யாததே  காரணம் .இப்பிறவியில் இந்த உயிர்  இந்த உடலோடு  இருக்கின்றபோதே  ஆற்றும்  கர்மங்கள்  ஆயிரம்  ஆயிரம்  இருக்கின்றது .விழிப்போடு  மனம் விரும்பி  தர்மங்கள்  செய்வேண்டியது  அவசியமாகிறது .பெரும்  மகிழ்ச்சிகொண்டு  இறையாற்றல்  கொண்டு  ,இறைவனுக்கு  நன்றி  சொல்லி  ,தர்ம பணியினை  செய்தல்  மிக உன்னதமானது .செய்து பாருங்கள்  வெகு விரைவில்   தரித்திரங்கள்  இல்லாமை  யாவும் ஓடிவிடும் . 
மீண்டும்  நினைவு  படுத்த  விரும்புகின்றேன் .தர்ம காரியங்கள் எதுவாயினும்   ,மனம்  மகிழ்ச்சியோடு  செய்யும்  எதுவும்  பிறருக்கு எந்தவகையிலும்  துன்பம்  நேராது  செய்யும் செயல்கள்  எதுவாயினும்  ,ஒரு மந்திர  ஜபமோ  இல்லது  தியானமோ  அல்லது  இல்லாதவர்களுக்கு  உதவிகள்  செய்வது  எவ்விதமெனும்  அல்லது  மனதார  வாழ்க  வளமுடன்  என்று வாழ்த்துவதோ  இவை யாவுமே  தர்ம  காரியங்களே. இது போன்ற  தர்மம் குறைந்ததின்  விளைவே  இன்றுள்ள  சூழல்  அதனால்  அவதியுறுவது  அனைவருமே. யாவருமே  இறையின்  பிம்பங்களே .ஒரு இறை  அங்கே  துவண்டாலும்  பாதிப்பு  அதனோடு  தொடர்புடைய  யாவருக்குமே .இதில்  இன்னொரு சூட்சுமம்  இருக்கின்றது .தர்மத்தை  செய்யும் போது  எவன் ஒருவன்  பிரதிபலன்  பாராது  செய்கின்றானோ  அவன்  முத்தியை நோக்கி மோக்ஷத்தை  நோக்கி செல்கின்றான் என்று  ஸ்ரீமத் பாகவதம் சொல்கின்றது.அவனுக்கு  இறைவன்  தேவையானதை  கிடைக்கச்செய்கின்றான் வெகு விரைவில் .இதை செய்தால், இந்த தர்மம்  செய்தால்  , இந்த புண்ணியம்  கிட்டும் என்பது  உண்மையே .இவை  பிறப்பினை  நல்ல வளமோடு  வாழவைக்கிறது  என்பதும்  உண்மையே .ஆனால்  பிரதிபலன்  பாராது  செய்யும்  தர்ம  செயல்கள்  அவனை  மிக உயர்ந்தவனாக  மாற்றிவிடுகிறது .  வெகு விரைவில்  இறை அருகே  அழைத்துச்செல்கிறது .அவனுக்கு  பிறப்பும்  இல்லை இறப்பும்  இல்லை இப்படி  யாறாவது செய்யும்  ஒருவரை  கண்டாலே  பெரும்  புண்ணியமே .இதில்  இன்னொரு  சூட்சுமமும்  இருக்கின்றது  ,பாவத்தை எல்லாரும் முன்னிலும் சொன்னால் பாவம் ஒழிந்துவிடும் .ஆனால் புண்ணியத்தை எல்லாரும் முன்னிலும் சொன்னால் புண்ணியம் உடனே அழிந்துவிடும்.எனவே புண்ணியம்  செய்வோம் அதில் ரகசியம் காத்திடுவோம்.




எம் குருமார்கள் மூலமாக  இறை எமக்கு உணர்த்தியதை  எழுதுகிறேன்.எல்லாம்  குருவிற்கு சமர்ப்பணம் .எதுவும் எமக்கு  சொந்தமில்லை ஒரு சில எளிய விசயங்கள்  உன்னதமானவை  சொல்லப்பட்டிருக்கின்றது .முடிந்தவர்கள் படித்து கரையேருங்கள் யாருக்கு எது உணர்த்தபடவெண்டுமோ அது  எவ்விதமெனும்  இந்த இதழ்  மூலமாகவோ  அல்லது  அவர் விரும்பிய  வண்ணம்  எவர் மூலமாகவோ சென்று சேரும்  என்பது  இறையின் ஆசி .ஒரு சிலருக்கு சிலர் சொல்வதால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது . ஒரு சிலர் சொல்வதாலே அது அவர்களுக்கு நன்கு செயல்பாட்டிற்கு வருகின்றது.வேறு யாரும் சொன்னாலும் அங்கே பலனில்லை.
ஆக இறை எமக்கு  உணர்த்தியது   இவை.அதை எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம்.

இறையின் பிம்பங்களாகிய நாம் அனைவரும் பிரம்மத்தின்  ஸ்வரூபங்கள். என்றென்றும் பிரம்மத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வோம். மனோபலம் ஆத்மபலம் பெறுவோம்.

வாழ்க வளமுடன்

ஓம் அகத்தீஸ்வராய நமஹா
ஓம் அகத்தீஸ்வராய நமஹா
ஓம் அகத்தீஸ்வராய நமஹா



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்