வேல் விழி நங்கையாள் ..!!!



சர்வ மங்கலம் நிறைந்தவளே !! அழகு வெள்ளமே ..!! அழகின் அழகே ..!! ஜுவாலைத் தீபோன்ற கண்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றுபவளே!!   கருணையின் பிறப்பிடமே ...!! தேவியே ..!! ஈசனின் நாயகியே !! நின் பார்வை படுமிடமெல்லாம்  என்றென்றும் சுபிக்ஷம் தருபவளே ..!! சுத்த தங்கம் போன்று ஜொலிக்கும் சொர்ணாம்பிகையே ..!!  தாயன்பு எனும் கருணை அலைகள் கொண்டு ஆயிரம் ஆயிரம் கோடி ஜீவராசிகளையும் இயக்கி , காத்து ,அரவணைத்து ,யாவற்றிகும் அமுதுபடைக்கும்  சர்வ வல்லமை பெற்றவளே !! நின் அருள் அலைகள் ஒளி வீசட்டும் என்றென்றும் !!

வில்லினை போன்ற புருவங்களை உடையவளே !! வேல் விழியை போன்ற கண்களை உடையவளே !! மஹா மஹா சக்தி நிறைந்தவளே !! அழகிய புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்தவளே !! கருணா ஸாகரமே !!நின் பெருமையும் புகழும்   புராணங்கள் கூறுகிறது அவை யாவும் அளவிடற்கரியது !! நின் பாசம் நிறைந்த அருள் ஒளி பார்வையே கோடான கோடி ஜீவன்களை ஈர்க்கிறது !! ஈர்த்து அமுதமேனும் பாசமழையால்  திக்குமுக்காடசெய்கிறது !! ஜொலிக்கும் பொன்னொளி நிரம்பிய தேகமும் ,நின் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் ,தாயன்பு நிறைந்த கருணையும் ,அழகிய புன்னகையும் யாவற்றிற்கும் அருள் ஆசி செய்யும் நின் தன்மையும் ,நின் வியத்தகு ஆற்றலும்,அற்புதம் அற்புதம் அற்புதம் தாயே !!!இவை யாவற்றையும் ,எண்ணி எண்ணி ,வியந்து வியந்து , நின் பெருமை போற்ற பிறவிகள் போதாது தாயே ..!!  நின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகிறோம் தாயே !! அருள்  தாருங்கள் !!!


தேவியின் அலைகள் உணர்தல் என்பது பூர்வஜென்ம புண்ணியம்.தேவியின் அற்புதத்தை துளி உணர்தல் என்பது ஜென்ம ஜென்மபுண்ணியம்.காலம் காலமாக இறைபக்தி கொண்டு அவளை தொழவேண்டும் ,காலத்திற்கு அப்பாற்பட்டவள் ,சுழலும் பிறவி இது .இது போன்ற ஆயிரம் ஆயிரம் சுழற்சியை கண்டவள் தேவி .மனித அறிவுகொண்டு அறிதல் என்பது கடினம்.தேடி தேடி சென்று அவள் புகழ், அவள் பெருமை, அவள் தாயன்பு என யாவற்றையும் போற்றி, நினைந்து ,உள்ளம் உருகி, தேவியின் பொற்பாதம் பணிய , கருணாஸாகரமாய் அருள் ஆசி செய்கிறாள்.ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜீவராசிகளும் தேவியின் குழந்தைகளே, தாம் ஈன்றெடுத்த குழந்தைக்கு எக்காலத்தில் என்ன தரவேண்டும் என்பதை அறிந்தவள் .ஆகா எந்த விண்ணப்பமும் தேவையில்லை.   தாயே....!! என்று அன்பால் ஈர்ப்பால் அவள் பாதம் பணிய தேவியின் அலைகள் அப்படியே மனதினை கவ்விக்கொள்ளும் .அக்னி ஜுவாலையில் புடம் போட்ட தங்கம் போல ,மனசு ஜொலிக்கும் ,தூய்மை வெண்மை சூழ்ந்துகொள்ளும்.அது போதும் அன்றைய நாளுக்கு மிக அற்புதமாய் யாவற்றையும் எதிர்கொள்ளும் தன்மை பெரும்.இந்த அலைகள் வந்த உடன் ,நம் அருகே இருக்கும் சூழல் ,நம்மை தொடர்வுகொள்ளும் அன்பர்கள் அலை இயக்கம், என யாவும் இதமாய் எந்தவித பினக்கின்றி நன்மை பயக்கும்.இந்த அலைகளை உள்ளத்துள்ளே நிரப்பிக்கொண்டு செல்லுங்கள் முதலில் நீங்கள் ஆனந்தமாய் இருப்பீர்கள் பிறகு பிறர் தாமாகவே உங்களிடம் வந்து அன்பாய் பேசுவார்கள் .யாவற்றையும் அற்புதமாய் மாற்றும் அற்புத அலைஇயக்கம் தாயவளின் அருள் ஆசி அலைகள்.



தேவியின் அருள்ஆசிகள் என்பது ஒரு பொருள் அல்ல .அது ஒரு அலை .மிக அற்புதமான மெல்லிய அதிர்வுகள் கொண்ட மனதை வருடும் அலை.உங்களோடு பல பிறவிகள்  தொடர்ந்துகொண்டேயிருக்கும் அற்புத அலைகள்.இதோ இந்த வெளியில் தான் இருக்கிறது.இதோஇந்த காற்றில் தான் இருக்கிறது.ஒரே ஒரு துளி தான்.ஆனால் அந்த ஒரு துளி, அவை உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது உரைக்க இயலாது.வர்ணிக்க இயலாது.எழுத இயலாது.வெண்பனி போன்ற அலை உள்ளத்தில் உறைகிறது.இமயமலை பணியை போன்ற குளுமை , உள்ளத்தை  குளிரவைத்து அப்படியே உறையவைக்கிறது.மேலே இருக்கும் தேவியின் படத்தை பார்த்தாலே அல்லது நினைத்தாலே அல்லது உங்கள் மனம் கவர்ந்த கடவுள் ஏதேனும் ஒரு விதத்தில் ,அவளின் தன்மை அவளின் ஆற்றல், எப்படி யிருக்கும் என்று நினைத்தாலே போதும் ,உள்ளம் அது மெல்லிய அலையினை தாமாகவே ஈர்த்து, தன்னுள்ளே இருப்பதை உணர்ந்துகொள்ளும்.ஒரு சிறிய மாற்றத்தினை பிரித்து உணர்ந்துகொள்ளும்.ஒரு நொடியில் இருக்கும் கோடியில் ஒரு துளி தான் அது யாவற்றையும் அறிந்துகொள்கிறது, அறிந்து அதன் தன்மையை அங்கே நிலைநிருத்திவிடுகிறது.அமைதியை மெல்ல மெல்ல துளிர்விடவைக்கிறது.தற்பொழுது எம்முள்ளே எம் உள்ளத்துள்ளே குடிகொண்டிருக்கும் அலை தெய்வீகம் நிறைந்தது அன்பு நிறைந்தது என்பதை உணர்ந்துகொண்டால் ,அது போதும் அது நம்மோடு பயணிக்கும் காலம் காலமாய்.எந்த கோவில் சென்றாலும் அங்கே தவழும் சக்தி அலைகளோடு மிக இயல்பாக ஈர்க்கப்பட்டு இறைத்தன்மையை உணரவைக்கும்.



பொருள் தேடும் உலகத்தில் தேடி தேடி எவ்வளவு ஆற்றலை இழந்தோம் எவ்வளவு அற்புதமான பொன்னான காலத்தை இழந்தோம் .இவை எல்லாம் அழிவை' நோக்கிதானே செல்கிறது என்பது மேலும்' மேலும்' யாவருக்கும்' கொஞ்சம்' கொஞ்சமாக புரிந்திருக்கும்.எது அமைதியானது ? எது நிலையானது ? எதை தேடி இந்த மானுட வாழ்வு தொடர்கிறது? எவ்வளவு தான் கர்மவினை தாக்கம் தொடர்ந்தாலும் ,முடிந்த வரை அவைகளை அனுபவித்து,யாருக்கும் துன்பம் தராத வாழ்வு தொடர்ந்து  ,இறை என்னும் பேரின்பம் நோக்கி, என்றுமே நிலையான உன்னதமான பேரமைதி தரும் சர்வவல்லமை பெற்ற தெய்வீக அலைகளை நோக்கி ,ஈர்த்து பயணிக்கும் வாழ்வே மிக சிறந்தது.இப்படி ஒரு தன்மை இப்படி ஒரு நிலைக்கு மனம் வருகிறபோது ,பயணம் மிக இனிமையாக மாறும்.வாழ்வு அமைதியாக மாறும் ,தடைகள்' அது தாமாகவே விலக ஆரம்பிக்கும்.சிக்கல்கள் தெறித்து ஓடும்.யாவுமே இறை தேடும் பயணம் தானே ,இறையிலிருந்து வந்தது மீண்டும் அது இறை நோக்கியே செல்லவேண்டும் அது தானே உண்மை அது தானே முடிவு .மாயை எனும் புகை சூழ்ந்ததால் அதிலிருந்து மீளாமல் வீணாகிய காலம் அதிகம்.மீள வழி கிடைத்துவிட்டது,ஆக இறை நோக்கி செல்ல செல்ல இன்னல்கள் தடைகள் அகன்று முழுமையை நோக்கி செல்கிறது.



ஆடி மாதம் என்பதே சக்தியின் தன்மை, இறையின் தன்மை, இயல்பை விட மிக அதிகமாய் இருக்கும் மாதம்.உள்ளம் நிறைய இறை அலைகளை, சக்தியின் அலைகளை விரும்பி ஏற்று நிரப்பிக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு தரும் மாதம்.ஏனெனில் இறை அலைகள் தவழ்கிறது அது தாமாகவே."...நீ இத்தனை நாள்  கிழிச்சது போதும் எல்லாவற்றையையும் தூக்கி எறிந்துவிட்டு ,கிடைக்கும் அமைதியான இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து ,உள்ளத்துள்ளே அன்பு மிகுந்து தேவியை வழிபடு.." என்கிறார் எம் குரு நாதர்.எனவே உள்ளம் நிறைய இறை அலைகளை நிரப்ப முயற்சிசெய்ய இறையே பலமடங்கு உள்ளத்துள்ளே குடிகொள்ளும் அற்புத காலம்,இறை அலைகள் உள்ளத்துள் சென்றாலே ஒரு அமைதி ஒரு பேரின்பம் ஒரு ஆனந்தம் அது தாமாகவே தவழ்கிறது . இறை வந்த உடனே சூட்சும சரீரம்  ஒரு திடம் பெறுகிறது.ஒரு செறிவு பெறுகிறது.முன்பை விட வலிமை பெறுகிறது.இருக்கும் உடலோடு மனதோடு தான் அதுவும் இருக்கிறது .எப்பொழுதெல்லாம் இறை அலைகள் நெஞ்சத்துள் நிறைகிறதோ அப்பொழுதெல்லாம் உப்பி பெருத்து உடம்பில் ,மனதில் ,உயிரில் ஒரு நம்பிக்கையை வளர்க்கிறது.சூட்சும சரீரம் ஒரு அற்புதமான தேகம் .இறை அலைகளை மட்டுமே பெற்று நம்மோடு என்றென்றும் பயணிக்கிறது.இருக்கும் இந்த உடல் இறந்தபின்னும் பின் எத்தனை பிறவி பெற்றாலும் அதோடு ஒட்டியே வரும் ஒரு அற்புதமான தேகம் இது.இதனை நாள் தோறும் மெருகேற்றுவது என்பது எந்த அளவிற்கு மனதில் நாம் இறையை சக்தியை உணர்ந்திருக்கிறோம் என்பதை பொருத்திருக்கிறது.எந்தெந்த பிறவியில் எந்த அளவிற்கு இறை சக்தி சேமித்து எந்த அளவிற்கு இந்த உயிர்  முன்னேற்றம் பெற்றது என்ற தகவல்களை கொண்டிருக்கிறது.இறை சக்தியை உணர்தலே ஒரு சுகம் அதில்  இந்த சூட்சும தேகத்தை உணர்தல் என்பது வாழ்வை மேம்படுத்தி அடுத்த கட்டநிலைக்கு அழைத்துசெல்லும்

அற்புத அலை இயக்கம் சூழ்ந்துள்ள இந்த ஆடி மாதத்தில் இறை செயல் இறை பணி ,இறை உணர்தல்  என இறைக்கே மிக மிக  உகந்தது என்பதை உணர்ந்து , வில்லெனும்  புருவத்தாளை,வேல் விழி நங்கையாளை ,அண்டசராசரங்களை ஆட்சிசெய்பவளை ,ஈசனை ஈர்த்த நாயகியை ,தாயன்பு நிறைந்தவளை ,கருணாஸாகரத்தை ,உள்ளத்தில் விரும்பி ஏற்று ,அவளின் தார்மீக அலைகளை உணர்ந்து,உள்ளம் உருகி, அவள் பொற்பாதம் பணிந்து, அவள் அருள் அலைகளை உணர்வோம்.வாழ்வில் வளம் பெறுவோம் .!! வாழ்கவளமுடன் !! வாழ்கவளமுடன் !! வாழ்கவளமுடன் !!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!






Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்