மெல்லிய அலைகளை தேடி ...II


ஆதி அநாதி வெட்டவெளி விரிந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம் ,விருப்பு வெறுப்பு ,கோபம் ,பாரபட்சம் என ஏதுமின்றி ,எந்த சலனமும் இன்றி ,நிசப்தமாக ,சோ ....ஹம் ...என ஒரு வித சூட்சும ஒலியில் எங்கும் எங்கெங்கும் வியாபித்து பரந்து விரிந்துகொண்டேசெல்லும்  கேட்பாரட்ற்ற அநாதியின் ஆதி அந்தமில்லா அலைகள்.இந்த அதி சூட்சும அலைகளை  ஒரே ஒரு முறை ,ஒரே ஒரு துளி மனதால் பருக ,மனதால் உள்வாங்க ,ஆழ்ந்த அன்பெனும் தன்மை நிறைந்த அலைகள் அது தாமாகவே ஈர்க்கப்பட்டு ,பேரானந்தம் தந்து ,மித மெல்லிய ஊடுருவிக்கொண்டேயிருக்கும் அலைகள் வழியே எங்கோ இழுத்துச்சென்று ,சொல்ல இயலா நிலைக்கு அழைத்துசென்று ,பேரமைதியில் மிதக்கவைக்கிறது. மெல்லிய அலை பிரபஞ்சமெங்கும் பரவும் அலை ,ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜீவராசிகளையும் அரவணைத்து கவர்ந்து,உடல்,மனம் ,உயிர் என யாவற்றையும்  ஊடறுவிசென்றுகொண்டேயிருக்கும் புரிய இயலா விந்தை புரியும் அலை.மௌனமாய் ஆழ்ந்து கண்மூடி இந்த மெல்லிய அலைகளோடு நாம் புரியும் பயணம் .....சொல்ல இயலா சுகம் தரும் பேரானந்தம்...

மனம் என்பது இறைவன் போல என்றும் பேரானந்தம் கருணை நிறைந்து இருந்தால் அன்பு அலைகள் வழிந்து ஓடுகிறது.அதன் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துகொண்டேசெல்கிறது.மனதை அமைதியில் பேரானந்தத்தில் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் எளிதாக லேசாக மிக இலகுவாக அவர்கள் செல்லும் வழியிலேயே யாவும் கிடைத்துவிடுகிறது.வாழ்வின் இரகசியங்களை மிக எளிதாக உணர்த்திவிடுகிறது.உடலிலே இருக்கும் கோடான கோடி  செல்கள் இயங்கி இயங்கி , உருவாக்கும் சக்திகளை,    காந்த ஆற்றலாக மாற்றி , இரு பகுதியாக பிரித்து ,ஒரு பகுதியினை கொண்டே உடலின் அணைத்து கருவிகளையும் இயக்கி,மறு பகுதியினை மனமாக மாற்றிக்கொன்டேஇருக்கிறது.இந்த மனமும் ஒரு இடத்தில் இருப்பதில்லை.இதனை இப்படியே விட்டுவிட்டால் காம,குரோத,லோப,மத மாச்சரியத்தில் அது தாமாகவே சிக்கிக்கொள்ளச்செய்கிறது. ஆனால்அதனை உள்நோக்கி அதன் மூலம் என்ன என்று ஆழ்ந்து செல்ல திருப்பினால் ,இந்த மனம் இதற்கு முன் எப்படி இருந்திருக்கும் ,எங்கிருந்து எம்முள் வந்தது என ஆராய அது காந்த ஆற்றலாக ,அப்படியே இன்னும் உள்செல்ல உயிர்சக்தியாக, உயிரின் மூலமாக ,இறைநோக்கி செல்கிறது என்று மகான்கள் தம் இறைத்தன்மையால் கூறியிருக்கிறார்கள்.இப்படி கடந்து உள் செல்லும் மனம் நிறைந்த மனமாக,இந்த உலகத்தில் இருக்கும் சர்வ ஜீவராசிகளையும் சமநேர்நோக்கான பார்வையால்  யாவும் ஒன்றே ,யாவும் இறையே, என ,அன்பின் வழியில்  ஈர்த்து  இறையில் கொண்டுசேர்க்கிறது.

இந்த உடலுக்கு தேவையான சக்தி என்பது உணவின் வழியே  ஒரு பகுதி கிடைக்கிறது.அது குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் தான். இன்னும் நிறைய ஆற்றல் கோள்கலிருந்தும்,காற்றிலிருந்தும்,ஆகாயத்திலிருந்தும் பெறப்படவேண்டும்.உணவை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ,மற்றைய வழிகள் வழியே அது தாமாகவே பெறப்படும் ஆற்றல் ஒழுங்காக உடலால் ஈர்த்துக்கொள்ளப்படுதல் தடைபடுகிறது.பழக்கத்தினால் உண்மையான தேவை இல்லை என்ற போதிலும் ,கிடைக்கிறதே என்ற காரணத்தினால் உண்ணப்பட்ட அதீத உணவு ,அந்த உணவை செரிக்க தேவையான அமிலத்தை சுரக்கும் உடல் கருவிகளுக்கு அதீத அளவிற்கு இயங்க செய்து, அதை  முடிந்த வரை பழுதுஅடையும் வேலையே செய்கிறது இன்று வரை அதன் தாக்கமே எண்ணில் அடங்கா நோய்களுக்கு மூல காரணம்.என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம் .




இவை எப்படியிருந்தாலும் , மனம் ஒரு நிலையான தன்மை பெற ,ஒரு thoughtless state பெற நிறைய ஆசனங்கள் இருக்கிறது.ஸ்வஸ்திக் ஆசனம் ,கோமுகாசனம் ,சித்தாசனம் வஜ்ரமூலபந்தாசனம் போன்ற ஆசனங்கள் எமது அனுபவத்தில் மிகக்சிறந்த ஒரு ஆளுமைதிறனையும் ,தன்னம்பிக்கையும் ,தரும் அற்புதஆசனங்கள் அவை.அஸ்திவாரம் நன்கு பலமாக இருந்தால் தானே அதன் மேல் எழும் கட்டிடங்கள் வலுவாகஇருக்கும்.அது போல ஒரு உறுதியான ,நிலையான மனம் பெற ,இந்த ஆசனங்கள் மிக அற்புதபங்களிக்கிறது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.எதைசெய்தாலும் ஒரு பிடிப்பு இல்லை ,வாழ்வே வெறுத்துப்போகிறது,எதன் மேலும் ஒரு அலுப்பு தோன்றுகிறது,எதையும் உருப்புடியாக செய்யவில்லை ,எந்த வேலையும் செய்ய மனம் ஈடுபடுவதே இல்லை எனும் நிலையில் இருக்கும் அன்பர்கள் ,இது போன்ற ஆசனங்களை அதி காலை வேளையில் வெறும் வயிற்றில் செய்து பழக மாற்றம் வெகு விரைவில் உண்டாகும் என்பது அனுபவ உண்மை.


மகான்களின் அலைநீளம் மிக அற்புதமான விசயம்.ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்வுகள் யாவும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல மிக அழகாக நிறைவேறுகிறது. ஒருவரை அழைப்பதும் அதற்கான கர்மவினை காரணமும் ,அதன் நிவர்த்தியும் எல்லாம் அச்சு பிசகாத நேர்த்தியும் பிரமிக்க வைக்கிறது.அவர்கள் அலைநீளம் சாதாரண மனிதனின் அலை நீளம் போல இல்லை.அவர்கள் சொல்லும் எதுவும் நடைமுறைக்கு வருகிறது.எது சாத்தியமோ எது நிகழுமோ அதை அழகாக வரும் முன்னரே கணித்து சொல்கிறார்கள்.அதை அந்த அலைநீளத்தில் மிக அழகாக சேர்ந்துகொள்கிறது. உதாரணமாக நமக்கு தாகம் ஏற்படுகிறபோது யாரேனும் கொஞ்சம் நீர் தந்தால்நன்றாக இருக்கும் என்று  எண்ணிக்கொண்டிருக்கும்போதே ,யாரேனும் ஒருவர் வந்து, கொஞ்சம் தண்ணீர் அருந்துங்களே என தருகிறபோது .அப்பப்பா எத்தனை  ஆனந்தம் கொள்ளும்,தேவையான போது,சரியானநேரத்தில் செய்யும்உதவி.அதுவும் ஒரு உயிருக்கு என்ன உணமையான தேவையோ அதை கொடுத்து உதவுவது என்பது மிகப்பெரும் புண்ணியம்.கிட்டதட்ட இறையின் தன்மை .!!  இப்படி சரியாகவே செய்துகொண்டிருக்கும்  மிக உன்னதமான செயல் , மகான்களை மானுட முறையிலிருந்து மிக அதீத உயரத்திற்கு உயர்த்துகிறது.


அவர் ஒரு மெல்லிய தேகம் படைத்தவர்.வயிறு ஒட்டிபோய் ஏதோ இலை தலைகளை ,மூலிகைகளை சாப்பிட்டால் தான் இப்படி ஒரு தேகம் வரும் என நினைக்கிறோம்.இந்த ஐயாவை பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியிருக்கிறோம்.அழுக்கான வெண்மை வேட்டி ,ஒரு மெல்லிய அழுக்கான துண்டு உடம்பின் மேல் போர்த்திகொண்டிருக்கிறார்கள்.கையில் ஒரு பேப்பர் அதிலே ஸ்ரீ ராமர்மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்லோகம்.எப்பொழுதும் ஸ்ரீ ராம நாமம் பற்றியே பேச்சு ,கணீர் கணீர் என்று ஸ்வரமாக வார்த்தை விழுகிறது.தோரணையில் அவர் பேசும் பேச்சு ,ஒரு ராஜகம்பீரம் நிறைந்திருக்கிறது , ஆயிரக்கணக்கான மக்கள் நிறைந்த சபையில் ஒருவர், பெரும்நம்பிக்கையுடன் ஆணித்தனமாக ,எவ்வாறு பேசுவாரோ அவ்வாறு பேசுகிறார்,இவர் சொல்லும்  ஸ்ரீ ராம சரிதம் கேட்கவே பிரம்மிப்பாகஇருக்கிறது ஆனால் யாரும் இவரை கண்டுகொள்வதில்லை.ஏதோ பேசுகிறார் என்று மக்கள் வருவதும் சாமியை வணங்குவதும் என செல்கிறார்கள்.



ஸ்ரீ ராம நாமம் ஒரு ஆயிரதெட்டுமுறை சொல்லிவிட்டு சென்றால் மட்டுமே இவரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிட்டலாம் என தோனுகிறது.அல்லது உள்ளம் நிறைந்த அன்போடு கருணையோடு இருந்தால் சாத்தியம் .ஏனெனில் இந்த ஐயாவை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல.சாதரண ஒரு ஸ்தூலதேகம் தான் .பார்க்க ஒரு சாதரண மனிதர் போல் தோற்றம்.ஆனால் இறை அலைகள் நிரம்பி வழிகிறது.கண்கள் ஒளி பொருந்திஇருக்கிறது.

யாம் ஒருமுறை நங்கநல்லூர் ஆஞ்சநேயரை தரிசிக்க சென்ற போது ,அங்கே இயல்புக்கு மாறாக கோவில் நடை சாற்றப்பட்டிருந்தது,ஏதோ ஒரு பெரியவர் அந்த தெருவில் வசிப்பவர் இறந்து விட,கோவில் ஆகம விதிப்படி ,நடை சாற்றிவிட்டார்கள்.சென்னையில் இருக்கும் trafficல் இவ்வளவு தூரம் வந்து ஆஞ்சநேயரை தரிசிக்க முடியவில்லையே என்ற ஒரு வருத்தம் மனதில் ,என்ன செய்வது ,எல்லாம் இறை செயல் என எண்ணி அருகில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ஹீரிவர் கோவிலுக்கு செல்வோம் என முடிவெடுத்து வந்தோம்.ஒரு சிறிய இந்த மன வருத்தம் அதே நினைவில் ,லக்ஷ்மிஹயக்ஹீரிவர் கோவில் அருகே வந்தோம் .வண்டியை விட்டு சற்றே இறங்க ,
எதிர்பாராமல் சட்டென ஒரு பெரியவர்.

 " பத்து ரூபா கொடு நூறு ரூபா தருகிறேன்..." என்றார்.பெரியவர் என்றும் மரியாதைக்கு உரியவர்கள் எனவே ,எதுவும் யோசிக்காமல் பத்து ரூபா கொடுத்தவுடன் வாங்கிக்கொண்டார்.
மேலும் பேசுகிறார் " குழந்தையை மருத்துவரிடம் காண்பி..."
ஸ்ரீ ராமானுஜர் ....வைத்யசாஸ்த்திரர் ...தெரியுமா..." இன்னும் ஏதோ சொல்கிறார் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

ஏற்கனவே ஆஞ்சநேயரை தரிசிக்க முடியவில்லையே என்கிற வருத்தம் முடிவதற்குள் ,இந்த பெரியவர் எம்மோடு பேசிய நிகழ்வு எதிர்பாராமல் சட்டென நிகழ ,இங்கே வந்தவர் எம்மோடு பேசியவர் யார் இவர் ? உண்மையிலேயே எம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அன்று  எப்படி இவருக்கு தெரியும் ? அவர் பேசிய விதம், தொனி,புரிந்தும் புரியாத வார்த்தைகள்,,வந்தவர் ஒரு மாபெரும் மனிதராகவே இருக்க வேண்டும் என சிந்தித்து முடிவெடுத்து அவரை பார்ப்பதற்குள்'  ,ஒரு பத்துவினாடிகள் தான் இருக்கும் ,அதற்குள் எங்கோ சட்டென சென்றுவிட்டார்கள்.




இந்த ஐயாவை சந்தித்த உடனே சட்டென மனம் கரைந்தது.முற்றிலும் மனதின் ஓட்டம் மாறியது.மிகபெரும் நிம்மதி சூழ்ந்தது.நேராக பார்த்து ஒன்றை சொல்லி ,மனதை மாற்றியமைத்து ,சூட்சும தேகத்தில் மகான்கள் புரியும் அற்புதம் ,அது செயல்படும் அடுத்தநொடியே  மனம் எண்ணமற்று இறையில் கரைகிறது.நிறைவு பெறுகிறது,ஆனந்தம் சூழ்கிறது,உள்ளம் குளிர்கிறது ஒரு இதம் பெறுகிறது மனம்.விரிகிறது விரிந்து ,அன்பால் சூழ்கிறது.ஒரே ஒரு நொடியில் ஒரு மகான் மற்றவரின் மனதினை tune செய்யும் விதம் .எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சையும் கரைத்து கணிவாக்கும் திறம் எண்ணி எண்ணி வியந்தோம் பலமுறை.இதே மனமே இங்கு சற்று முன்னர் இங்குள்ள சாதாரண மக்கள் எண்ண ஓட்டம் நிறைந்த அலைக்கூட்டத்தில் ஒரு தெளிவிள்ளாமல் குழம்பியிருந்தது.அதே மனம் வாகனங்களின் சத்தமும் மனிதர்களின் சப்தமும் நிறைந்த அதே இடத்தில் ,அய்யாவின் சூட்சும அலை, மனதை ஞானி போல் மாற்றி அன்பால் நிறைந்த மனதோடு ,ஒரு மிகபெரும் ஒளிஅலைகள் சூழவைத்து,யாவற்றையும் மகிழ்ச்சியோடு பார்க்கவைக்கிறது.
தற்பொழுது உள்ள நிறைவு நிலை ,ஒரு முறை தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஒரு பிரதோஷ நாளில் அங்குள்ள நாகலிங்க மரத்தின் அடியில் இருந்து ,வெறுமனே அங்குள்ள சூழல்கள் நோக்க ,அதில் உறைந்து கிடந்த சிவ அதிர்வு அலைகள்  மனதுள் புகுந்து மிகுந்த ஆற்றலை தந்தது.அது போலவே இன்று இந்த மகானின் அலைகள்.கிட்டதட்ட அது போலவே இருக்கிறது எவ்வளவு சக்திமிக்க அலைகள் ,மனதை நொடிப்பொழுதில் மாற்றும் தன்மை எண்ணி பிரம்மிக்கவைக்கிறது.


இது ஒரு நீண்டநாள் தொடர்பு கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் சூட்சுமமாக ஒளிவடிவத்தில் எம் மனதிற்கு கிடைத்த காட்சி அது.ஒளி பொருந்திய தேகம் எங்கும் ஒளி ,ஒரு குத்துமதிப்பாக ஒரு ஒளிவடிவ முனிவர் தேகம் இங்கே அருள் ஆசி செய்கிறது.அவரின் தன்மைகள் நிறைந்த ஸ்தூலதேகமே இன்று எம்முடன் உறவாடியே இந்த அய்யா என்று எண்ணத்தோன்றுகிறது.இந்த ஐயாவை எவ்வாறு சந்திப்பது என நிறைய அன்பர்கள் கேட்திருந்தார்கள் ,இவர் இருக்கும் இடம் தோராயமாக நங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ஹீரிவர் மற்றும் அதன் அருகே உள்ள கணபதி கோவில்.ஏனெனில் இங்கு தான் யாம் சந்தித்தது.ஸ்ரீ ராமநாமம் ஒன்றே இந்த ஐயாவை சந்திக்கவைக்கிறது என்பது எமது அனுபவம்.


இந்த மெல்லிய அலைகள் பிரதோஷ தினங்களில் கிடைக்கிறது .அதே அலைகள் இந்த மகான்கள் கைகளில் தவழ்கிறது.அதே அலைகள் தான் அன்பால் உள்ளம் நெகிழும் போது உள்ளத்தில் தவழ்கிறது.இப்படி அதிசூட்சுமம் வித்தை செய்யும் இந்த அலைகள் ,இவைகளை எளிதாக  தேடும் உள்ளங்களுக்கு நொடிப்பொழுதில் கொண்டுசேர்க்கும் மகான்கள் என யாவும் ஒரே நேர்கோட்டில் மிக அழகாக அதற்கே உண்டான அலைச்சுழலில் அரங்கேறுகிறது .ஸ்ரீ ஆஞ்சநேய மகான் அய்யா ஆசிகளோடு ,அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கின்றோம்.

வாழ்க வளமுடன்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!









Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்