இறை தேடும் பயணத்தில் II ....!!!



அன்பெனும் ஈர்ப்பு பசை ஒன்றை ,நீ படைத்த அத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி உயிருள்ளே அணுவிலும் அணுவாய் நுழைத்து வைத்து ,யாவற்றையும் ஈர்த்து பிடித்து ,காத்து,ஒன்றை மற்றொன்டாய் மாற்றி மாற்றி ,வெட்டவெளியிலிருந்து வந்ததை எல்லாம் மீண்டும் வெட்டவெளி செல்லும் வரை ,அதனுள் நீ நடத்தும் நாடகம் ,பாச  போராட்டம்,அன்பால் அரவணைப்பு ,இன்பம் ,துன்பம்,புகழ், பேரின்பம் ,அமைதி .பேரமைதி என நீண்டுகொண்டே செல்லும்  இந்த மாற்றங்களை நடத்திக்கொண்டிருக்கும் நின் திறம் எண்ணி எண்ணி , வியந்து,வியந்து, எதுவம் நிரந்தமில்லை ,இதுவும் கடந்து போகும் எல்லா பிரச்சினைக்கும் தீர்வும்  அதில் தீர்ப்பாய் வந்து நிற்கும் நின் வியத்தகு ஆற்றலையும் பிரமித்து ,வெட்கி தலைகுனிந்து ,நின் திருவடி வீழ்கிறேன்  பலமுறை...மாபெரும் வற்றா பேராற்றலே ..!! பிரபஞ்ச நாயகனே !! எல்லையில்லா கருணை கடலே ..!! அகன்று விரிந்த சுத்தவெளியோனே !! சூட்சும அலைகள் சூழ்ந்த சுத்த பரப்பிரம்மமே !! சுடர்மிகு ஒளியே ..!! ஜோதியே ..!! ஜோதியில் ஜோதியே..!!! மாணிக்க வாசகனார் கண்டு வியந்த ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ..!! ஆனந்தம் நிறைந்தோனே !!  நின் திருவடி வாழ்க !! என்றென்றும் நின் பாதங்களில் சரணாகதி ..!! சரணாகதி ..!!



ஸ்ரீ கோரக்கநாதர் கோவில் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியிருந்தோம்.அகத்திய உள்ளங்கள் மீண்டும் ஒருமுறை படித்து பயன்பெறுக.மீண்டும் ஒரு முறை எம்மை அழைத்த மாபெரும் சித்தர் பெருமகனார் ஸ்ரீ கோரக்கர்.இவையெல்லாம் சூட்சும நிகழ்வுகள் .ஸ்தூல கண்களால் பார்க்கும் முன்னரே ,ஒரிரு  நாட்களுக்கு முன்னரே சூட்சும அலைகொண்டு ,எங்கிருக்கும் ஒருவருக்கும் வெளிமூலம் சூட்சும அலை மூலம் ,உடலில் இருக்கும் சக்கரங்களை இயக்கி ,உணரவைக்கும் அதி நுட்ப கலை.இவை எல்லாம் கொடுப்பினை அல்லது விட்டகுறை தொட்டகுறை அல்லது விடாமுயற்சி இறை உணரவேண்டும் என்ற தீவிர  எண்ணம் இருந்தால் இவை இருக்கும் யாவருக்கும் நிகழும் என்பது உண்மை.அருள் அலை உணரவேண்டும் என மிக உயர்ந்த எண்ணம் ஒன்றை அய்யாவின்  ஜீவசமாதியில் வைக்க ,என்றேனும் ஒரு முறை ,கோ இரக்கம் நிறைந்தோன் ,என்றும் என்றென்றும்  இரக்கம் குணம் கொண்ட சித்தர் பெருமகனார் ,வைக்கும் கோரிக்கைக்கு மிக அழகாக தீர்வு அளித்து ,அதனை இந்த ஸ்தூல தேகம் கொண்டு உணரவும் வைக்கிறார்.அற்புதம் ..!!! அற்புதம் ..!!! அதி அற்புதம் ..!!!

சட்டென ஒரு அலை சூழ ,இருக்கும் இடத்தில ஒரு அமைதி இடம் தேடி அமர்ந்து கண்கள் மூட ,ஒரு சூட்சும அலை ஒன்று ,ஆக்னா சக்கரத்தையும் ,பிடரிக்கன்னையும் ,துரியத்தையும் சுழலவைக்கிறது.இந்த நெற்றிக்கண் எனப்படும் ஆக்னாவிலிருந்து மனதால் ஒரு கோடு வரைந்து அதை அப்படியே நெற்றியுனுள் உள்ளே சென்று ,அப்படியே பின்புறம் வெளிகொண்டு'வர அந்த இடம் பிடரிக்கண் ஆகும்.அது போல தலை உச்சியிலிருந்து உள்புறமாக  மனதால் ஒரு கோடு வரைய அது தொண்டை எனும்விசுத்தியில் முடியும்.இந்த இரு கோடுகளும் சந்திக்கும் மையப்பகுதி இருக்கிறதே (Iintersection) அது மனோன்மணி எனும் ஒரு மையமாகும்.இது உள்நாக்கிற்கு மேலே ஒரு அங்குலத்தில் இருக்கிறது.இந்த மையம் ஒரு அற்புதமான ஒரு சுகமான அருள் தன்மை உணரவைக்கும் மையம்.இதை இயக்க பழக பழக இதில் ஒரு திரவம் ஒன்று சுரக்குமாம் அதன் ஒரு துளி சுவைக்க ,பல மாதங்களுக்கு பசியே எடுக்காதாம்.பாறையில்  இருக்கும் தவளை இந்த மையத்தை அது தானாகவே இயக்க வைத்து ,அதன் மனோன்மணியிலிருந்து வரும் திரவத்தை ஒரு துளி சுவைத்து ஆண்டாண்டு காலம் உணவின்றி அப்படியே பாறையிலேயே தமது வாழ்வை உணவின்றி இருக்குமாம் பலகாலம்..இதற்கு லம்பிகா யோகம் என பெயர்.


எதேச்சையாக அய்யாவின் திருபுவனம் கோரக்க நாதர் கோவிலுக்கு செல்ல நேர்ந்தது.யாம் இதுவரை சென்ற வழக்கத்திற்கு மாறாக உள்ளே காதுகுத்து நிகழ்ச்சியும் ,காது  குத்தி வலிதாங்காமல் விம்மி அழும்  குழந்தை  சத்தமும் ,வேறுசில நிகழ்சிகளும் என ,ஒரே சலசலவென ,மக்கள் கூட்டமாக அலைமோதியது.யாம் உள்ளே சென்று ஐயாவின் அருகில் சென்று ,எமக்கும் ஒரு இடம் கிடைக்க ஐயாவை நேர் எதிர்நோக்கி அமர்ந்தோம்.அய்யாவின் ஜீவசமாதியில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகபெருமானுக்கு ,மஞ்சள்,சந்தனம் ,பால் ,பன்னீர் என நிறைய அபிஷேகம் நடந்ததுகொண்டிருந்தது.ஒரே சப்தமும் ,மக்களின் பேச்சும் வேறு சில சப்தமும் பார்க்க நெருடலாகயிருந்தாலும் ,எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


கோ இரக்க அய்யாவின் ஈர்ப்பு அலைகள் ,அங்கிருந்து விரிந்துகொண்டேஇருக்கிறது.ஈர்க்கிறது ,எதுவும் தேவையில்லை ,வெறும் அலைகள் தான் .இங்கே இருக்கும் அன்பர்களின் சூட்சும சரீரத்தை ஒரு பதம் பார்த்துவிடுகிறது.அது ஏதோ சூட்சுமமும் சூட்சுமமும் பேசிக்கொள்ளும் ஒரு வித்தை  என்பது போலவே உணர்கிறோம்.கையில் எதுவும் யாரும் தரவில்லை, உண்ண உணவும் யாரும் கொடுக்கவில்லை,யாரும் எந்த விலைஉயர்ந்த பொருளையும் தரவில்லை,எதுவுமே இல்லை.இவை கிடைத்தாலும் அவை யாவும் ,உண்மையான தேவையை தரப்போவதில்லை.ஆனால் இங்கே மனம் நிறைகிறது.அமைதி அலைகள் அது தானாகவே உள்ளத்துள் நுழைகிறது.ஒரு பிள்ளை தமது தாயை அல்லது குடும்ப உறவுகளை நீண்ட நாள் பிரிந்து பார்க்காமல் ,பிறகு ஒரு நாள் பார்க்கும் போது ,ஒரு ஈர்ப்பு வருமே ,ஒரு பாசம் வருமே,ஒரு அன்பு கலந்த உணர்வு வருமே ,அது போல ,அதையும் விட இன்னும் ஒரு படி மேல் ,எல்லாம் நிறைந்த ஒரு ஈர்ப்பு ,எம்பெருமானின் அரவணைப்பு ,எம் தாயவளின் கருணை பிணைப்பு,அது போன்ற அலைகள் சூழக்கண்டோம்...சூழ்ந்து எம் தாகத்தை ..இறை தாகத்தை இதமாய் நிரப்பும் அற்புத அலை கண்டு வியந்தோம்..உப்பி பெருக்கிறது சூட்சும தேகம்.பெருத்து உயர்கிறது ..இத்தேகம் வலுபெறுகிறது.இதுவே எம்மோடு இனிவரும் பிறவிக்கும் என்றென்றும் எம்முடனே இருக்கப்போகிறது.இவை நிரம்பினால் அன்பு அலைகள் தாண்டவமாடுகிறது.கருணை சூழ்கிறது.இந்த சூட்சும தேகம் சொல்வதையே ,ஸ்தூலதேகம் கேட்கிறது.ஸ்தூல தேகத்தில் வரம் மாற்றத்தை சூட்சும தேகம் படம் போட்டு காட்டுகிறது.சூட்சும தேகம் அதில் இருக்கும் பல்வேறு அழுக்கு அலைகள் இங்கே அய்யாவின் அருள்அலையால் புடம் போடப்பட்டு முன்னிலும் புதுப்பொலிவுபெறுகிறது...எல்லாவற்றையும்விட இறை அலைகள் நிறைகிறது.மனதை நிறைவடைய செய்கிறது..ஆனந்தம் அமைதி ,மிளிர்கிறது.....இங்கே இப்படியே இருப்பது சுகம் ..எதுவுமே தேவைஇல்லே இங்கே .அன்பின் அலைகள் அடர்த்தி மிகுந்து மிதக்கிறது.இந்த அலை உணர்ந்தோர் இது போன்ற இடங்களில் சப்தம் செய்வார்களா ..இல்லை இல்லை அவர்கள் இந்த அலை உணரும் போது தம்மை மாற்றிக்கொள்வார்கள்..ஆனால் இவை யாவற்றையும் பொருட்படுத்தாது ,அய்யாவின் அலைகள் ,இவை எல்லாம் ஒன்றுமில்லையப்பா... இங்கே அன்பு அலைகள் அது உம்முள் உருவாக்கும் தாக்கத்தை கவனி அது உன்னுள் உணர்த்தும் நிலை கண்டு பேரானந்தம் உணர்ந்துகொள் என்பதை ஒருவர் சொல்லாமல் எம்முள் உணர்த்துவது போல உணர்ந்தோம்




நெற்றியுள்ளே தீசுடர் போல ஒரு ஒளி ஒன்று சுழற்கிறது அப்படியே பிடரிக்கண் நோக்கி சென்று அதையும் இயக்குகிறது.துரியம் இயங்குகிறது. ஆழ்ந்து நன்கு கவனிக்க ஆக்னையும் பிடரிக்கண்ணும் ,துரியமும் ஒரே நேரத்தில் ,சுழன்று சுழன்று இயங்கி ஒரே ஒளிப்பிழம்பாய்  உடலுள்ளே உள்ளத்துள்ளே இருக்கிறது.நெற்றியிலே சூடம் பற்றிஎரிவது போன்ற ஒரு உணர்வு ,பிடரிக்கண்ணோ ..அரிப்பது போன்ற ஒரு உணர்வு,துரியமோநன்கு அதிவேகமாக சுழன்றுகொண்டேஇருக்கிறது.இவை யாவும் ஒரே நேரத்தில் சுழல  சூட்சும  அலைகள் விரிந்துகொண்டேசெல்கிறது .மனோன்மணி இருக்கும் இடம் தெரிகிறது.இந்த பிடறிக்கண் அலையும் ,ஆக்ஞை அலையும் துரிய அலையும் இயங்கி இயங்கி மனோன்மணியை ஒரு வழி செய்து பின்பு அதனை இயக்க முயள்கிறது..ஒரே ஒளி மயம்.ஸ்தூலஉடல் தெரியவில்லை .ஒரே ஒளி உடல்.அற்புதமாக இருக்கிறது.இந்த நிகழ்வு தொடர ..ஆற்றல் அலைகள் தாமாகவே சூட்சுமத்தில் நிறைந்துகொள்கிறது.இங்கே அய்யாவின் அருளால் சூட்சும அலைகள் நிரம்பிவழிகிறது.சும்மா இருந்தாலே போதும் ,பிறகு எல்லாம் அய்யாவின் அருள் ஆசி அலைகள் தான்...!!





வாரத்தில் ஒரு முறையேனும் ஆழ்ந்து உள்சென்று உள்ளம் நிறைந்து இந்த சூட்சும அலை குளியல் என்பது பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்து ,புதுத்தெம்பும் புத்துணர்வும் தருகிறது.மேலும் ஒரு படி சென்று ,இறை அலைகள் உணர வழிவகை செய்கிறது.உடம்பு மென்மையாகிறது .உள்ளம் சாந்தமாகிறது.இதம் தருகிறது.கண்கள் கருணை கொள்கிறது.நிதானமும் கர்வமின்மையும் தருகிறது.பொறுமையோடு இருக்கச்செய்கிறது.எதையும் ஆழ்ந்து கவனிக்கும் தன்மைதருகிறது.இறை நிகழ்த்தும் எதுவும்  எல்லாமும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் மனபக்குவம் தருகிறது.இந்த நிலை, இந்த பக்குவம் வருவது என்பது மிக சாதாரணவிசயமில்லை.அது வந்துவிட்டால் அன்பு அலைகள் தாமாகவே கவ்விக்கொள்ளும் அற்புதம் நிகழ்கிறது.எல்லாம் சம நேர்நோக்கான பார்வை பார்க்கும் திறன் தருகிறது.உண்மையிலேயே என்ன வேண்டும் என்பதை மிக சரியாக தீர்மானித்து அதை வாரிவழங்குகிறது இந்த சூட்சும ஆன்மீக குளியல் .எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது இந்த மென்மையான இறை அலைகள்.அவரவர் உணர்ந்தால் மட்டுமே சாத்தியம்.இந்த அன்பான உள்ளம் நெகிழும் இறை தன்மை ஒருவருக்கு அணு அளவேனும் கிடைத்தால் ,அவர் தன்மை மெல்ல மெல்ல மாறி இறை மிளிரும் தன்மை வரும் என்பது யாம் உணர்ந்த உண்மை .


இறை வாழி..!! எம் தந்தை வாழி ..!! சித்தர்கள் வாழி ..!! இதழ் வாசிக்கும் அகத்திய உள்ளங்கள் வாழி ..!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..!! வாழ்க பல்லாண்டு ..!! பிரபஞ்சமெங்கும் அமைதி அலைகள் பரவட்டும் ..!!! என அய்யாவின் ஜீவ அலை ஆசிகளோடு வேறு ஒரு நிகழ்வில் சந்திகின்றோம் ..!!!

வாழ்க வளமுடன்..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்