காருண்யவாராம் ...!!!





மதுரையின் centre of attraction ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் ஒரே இடம் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலே.ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா.ஒவ்வொரு நாளும் ஒரு அழகான நிகழ்வுகள்,நிகழ்ச்சிகள்  என அம்பாளின் அருள் கருணையால் இவை யாவும்  தொடர்ந்தவண்ணம் இருந்துகொண்டு வருவோர் செல்வோர் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.மதுரையில் இருப்பவர்களே எத்தனை முறை அம்பாளை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது என எண்ணி பாருங்கள்.தினந்தோறும் கிடைத்தால் தலை எழுத்தே மாறிவிடும்.காருண்ய வாராம் நிதிம்.. கருணை கடல்....எல்லையே இல்லாத கருணை நிறைந்தவள்...மீனாட்சி அம்பாளின் தரிசனம் கிடைப்பது  என்பது மிக பெரிய பாக்கியம் அதுவும் அவள் நம்மை அவள் கருணை மழையில் நனையவைத்துவிட்டால் என்றால் அந்த நாள் மிக புனித நாளே அது ஒரு பூர்வ ஜென்ம புண்ணியமே.அம்பாளின் அருள் அலைகள் சூழ்ந்து கருவறையே மிக அற்புதமாக ஜொலிக்கிறது.

கிட்டதட்ட இங்கு வருவோரின்  ஒரு சராசரி மனநிலை என்னவென்றால் அம்பாள் பார்த்து,சுந்தரேசுவரர் பார்த்து,பொற்தாமரை குளம் பார்த்து ,வல்லப சித்தர் ஜீவசமாதி பார்த்து என பல இடங்களை பார்த்து அனைத்தையும் ஒரே நாளில் முடித்துவிட்டு ஊர் திரும்பவேண்டும் என்பதே.ஒரு வித வேகமான மன ஓட்டத்துடன்  இருந்துகொண்டு இருக்கும் அமைதியை துவம்சம் செய்து ,ஒரு சாதரண மனிதர்களின் மன அலையையும்  அவர் அறியாமலே அவரையும் ஒரு வேகமான சூழலில் தள்ளும் நிலைக்கு , சூழலை உருவாக்கிவிடுகிறார்கள்.தாமும் அமைதியை உணராமல் அடுத்தவரையும் அமைதியை உணரமுடியா  நிலை தான் .ஆகா இதிலிருந்து தப்பிக்க நாம் நம்மை சுற்றிலும் ஒரு அருள்காப்பு புலத்தை உருவாக்கிகொள்ளவேண்டும் ,ஒரு வித ஸ்லோகமோ அல்லது  ஏதேனும் ஒரு வித நாமத்தையோ உச்சரித்து நம்மை சுற்றிலும் ஒரு வித அதிர்வு புலத்தை உருவாக்குவது அவசியமாகிறது.


அம்பாளின் தரிசனம் (பொது) என்பது கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரம் வரிசையில் நின்று பிறகே கிடைக்கிறது.VIP தரிசனம் ,டிக்கெட் வாங்கி  பார்க்கும் தரிசனம் போன்ற தரிசனங்களில் எமக்கு  பெரிய உடன்பாடு இல்லை. மிக அதிக கூட்டம் இருந்தால் கருவறையின்  அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து அருள் அலைகளை உணர்ந்து வருவது சாலசிறந்தது.ஒரளவிற்கு கூட்டம் இருந்தால்  முடிந்தவரை வரிசையில் நின்று இருக்கும் நமது மன அலைசுழல்களை குறைத்துக்கொண்டு ,கொஞ்சம் கொஞ்சமாக அங்கே தவழும் அலைகளை உள்வாங்கி ,கருணையின்  மூலம் நோக்கி செல்வதே உன்னதமானது,அம்பாளின் அருள் கடாட்சம் கிடைத்தால் தான் ,மகான்கள் ,சித்தர்கள் அருள் ஆசி தருகிறார்கள்.அம்பாளின் அருள் கடாட்சம் கிடைத்தால் தான் மழை பொழிகிறது.ஒருமுறை சதுரகிரியில் தந்தை அகத்தியர் அய்யாவின் சீடர் ,ஒரு இளம் சாது அவர் சொன்னார் " இங்கே சதுரகிரியில் மரம் செடி கொடி எல்லாம் மழையின்றி வாடிவிட்டது.நாங்கள் யாவரும் அம்பாளிடம் சென்று முறையிட்டு ,இதோ இங்கே பெய்கிறதே இந்த மழையை வரவழைத்தோம் என்றார்.அவர் சொன்னது போலவே  சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் அழகிய ஓடை ததும்பி செல்லும் அழகை எம் ஸ்தூல கண்களால் பார்த்தோம். அம்பாளின் அருள் கடாட்சம் இல்லை என்றால் சுபிக்க்ஷம் நிலவாது.அம்பாளின் அருள் கடாட்சம் இல்லைஎன்றால் எல்லாம் சூன்யமே .இயக்கு சக்தி இல்லை என்றால் எதுவுமே இல்லை.



கருணையே வடிவானவள்,அன்பின் நாயகி,,மிக இளமையான தோற்றம் கொண்டவள்.அம்பாளின் அருள் அலைகள் கருவறையில் மட்டும் தானா உள்ளது இங்கே இருக்காதா என என்னும் பொழுதே மிக அழகாக நம் அருகில் வந்து தவழ்கிறது.கருணையோடு இருப்பது என்பது மிக பெரும் பாக்கியம்.ஒரு சிறு துளி போன்ற கருணைஅலையை வைத்துக்கொள்ள இந்த இதயம் போதவில்லை',ஒரு துளியால் நிரம்பி வழிகிறது.இதே இந்த கருணையை கடல் போல் என்றும் வைத்திருக்கிறாளே இவள் இதயம் எத்தகைய வலிமையும் அன்பும் நிறைந்தது.கோடான கோடி ஜீவன்களையும் ஈர்த்து இழுக்கும் அன்பும் கருணையும் நிறைந்த, இவள் தன்மை எப்படியிருக்கும் என்று கற்பனைதான் செய்து பார்க்கமுடியுமா ? இப்படி இந்த கற்பனை, இந்த எண்ணம் தோன்றிய உடனே அம்பாளின் அருள் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ,நம் இதயத்தை அவளின் அருள் அலையால் நனையவைத்துவிடுகிறது. கருணை எண்ணத்திலே கொஞ்சம் கொஞ்சமாக வரிசையில் நகர்ந்து அம்பாளின் கருவறை தெரிய ,அவள் முகம் பார்க்க ,கண்கள் எல்லாம் அது தாமாகவே கண்ணீர் மழ்கிறது.இன்று ஏனோ எம்மை இந்த அளவிற்கு எம்மில் கருணையை நிரப்பி இதயத்தை கருணையால் நனையவைத்து அருள்மழை பொலிந்துஎம்மை ஆனந்தகண்ணீரில் மிதக்கவைத்துவிட்டாள்.



ஒரு சிறுதுளிக்கே இத்தகைய மாற்றமா ?அப்படியெனில் என்றுமே கருணையோடு சிலர் இருக்கிறார்களே அவர்கள் எத்தனை அழகு நிறைந்தவர்கள் ,எத்தகைய பாக்கியம் பெற்றவர்கள்.இறைவனின் அருள் அலைகளை கருணை அன்பு எனும் அலைகளால் என்றும் உணர்ந்துகொண்டு ,இறையின் தன்மையை ,எண்ணி வியந்து ,அதை சொல்ல இயலாது கருணையால் எதையும்  பார்ப்பவர்கள்.அன்பு மட்டுமே இவர்களை ஈர்க்க வைக்கிறது.ஏனெனில் இறையே அன்பாக இவர்களிடம் தவழ்கிறது. கருணை நிரம்பிய உள்ளங்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்றும் இளமையானவர்கள் .அன்பின் அலைகள் நிரம்பியவர்கள்.இவர்களுக்கு என்ன தேவையோ அதை இயற்கை அருட்பிரசாதமாக வழங்குகிறது.கோவிலில் நுழையும் போது சுத்தமான தாழம்பு குங்குமம் கிடைத்தால் நன்றாக இருக்கும்   எங்கு வாங்கலாம் என எண்ணிக்கொண்டே சென்றதால் என்னவோ ,ஒரு அன்பர் அவர் தாமாகவே வந்து சொல்கிறார்,நான் இங்கு சேலத்திலிருந்து வருகிறேன் ,பதினைந்து நாளுக்கு ஒருமுறை அம்பாளை தரிசிக்க வந்துவிடுவேன்,இங்கே மேல மாசி வீதியில் ஒரு பிராமின் சுத்தமான மஞ்சளில் தாழம்பு குங்குமம் பண்னுறார் .அதே கொஞ்சம் அர்ச்சனை செய்து தினந்தோறும் இட்டுகொள்கிறேன்.மனதிற்கு ஒரு திருப்தியாக இருக்கிறது.அதோடு அதை வாங்கி இட்டுகொண்டால் முகத்தில் எந்தவித அரிப்பு அலர்ஜி இல்லாமல் இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.இவர் சொன்னது ஏதோ காதில் வாங்கிகொண்டே யாமும் தொடர,எமது எண்ணமெல்லாம் அம்பாளின் அருள் கருணை பற்றியே இருந்தது வெகு நேரம்.பேச நா எழவில்லை ,ஒரு வித அமைதியை மட்டுமே நாடி அதனுள்ளே மனம் இருக்க ,மெதுவாக வல்லப சித்தர் அருகே வந்து அமர்ந்துவிட்டோம் வெகுநேரம். .எவ்வளவு கூட்டமும் எம்மை துளி கூட பொருட்படுத்தவில்லை,அந்த அளவிற்கு கருணை துளி அதன் வீர்யம் அதன் சக்தி நன்கு வியாபித்துஇருந்தது. அன்று என்ன நமக்கு கிடைக்கிறதோ அதுவே இறைவனின் ஆணை என எடுத்துக்கொண்டு முன்செல்ல ,அன்று நமக்கு எது உணரத்த பட வேண்டுமோ அது மிக அழகாக நடந்தேறுகிறது.



 கொஞ்சம் ஆழ்ந்து உட்செல்ல ,கருணை அலைகள் இங்கிருத்து வியாபிக்கிறது,வியாபித்து விரிந்து விரிந்து செல்கிறது.அம்பாள் கருணையின் கடல்,அவள் ஒரு துளி கருணையை ஒருவர் உணரும் வண்ணம் ஒரே ஒரு துளி கொடுக்க,எவ்வளவு மகிழ்ச்சியாய் சட்டென மாறுகிறது.எவ்வளவு ஆனந்தமாய் நொடியில் திளைக்கிறது இந்த மனம்.மனதிற்கு  ஒரு ஸ்திரத்தன்மையை  கொடுத்து,அன்பும் கருணையும் பெருக்கெடுக்கவைக்கிறது.

ஸ்ரீ மீனாட்சி அம்பாளின் புகழ் பாடும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்  கீழே கொடுத்துள்ளோம்.யாவரும் ஒருமுறையேனும் படித்து பின்பு ஸ்ரீ மீனாட்சி  அம்பாள் தரிசனம் செல்ல முற்படுங்கள் ,அம்பாளின் அருள் அலைகள் உணரும் வாய்ப்பு விரைவில் கிட்டும் .

உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம் 

ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நாநார்த்த சித்திப்ரதாம்
நாநா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேனார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

இந்த சிறிய கட்டுரையோடு மீண்டும் அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!

  

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்