செல்வவளம் அருளும் திருமகள் போற்றி !




நீண்ட இடைவெளிக்குபிறகு  அகத்திய உள்ளங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.அப்பப்பா....!காலம் சுழன்று கொண்டே பல்வேறு மாற்றங்களை உருவாக்கி கொண்டு  ஓடிக்கொண்டேயிருக்கிறது.எமது ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே பிரமிக்க வைக்கும் மாற்றங்கள்.இறை உணர்வோடு செயல்களை செய்தாலும் சரி,இல்லை  வேறு வழியில் சிற்றறிவிற்கு எட்டிய வரை செயல்கள் செய்தாலும்,அனைத்தும்,தக்க விளைவுகளை கொடுத்துக்கொண்டே, காலம்  தம் பயணத்தினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்கியவருக்கும்,முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கியவருக்கும் கர்மவினை என்ற ஒன்று ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனதன் பதிவிர்கேற்ப.என்ன செய்தோம் இந்த உயிர் அறிவை உணர ?எவ்வாறு  இங்கே கொட்டிகிடக்கும் சூட்சும அலைகளை உணர, நமக்கு கிடைத்த இக்காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டோம்? எந்த அளவுக்கு இறைநிலையிலேயே இருக்க பழகிக்கொண்டோம் ? என்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் எம்மையும் சேர்த்து.


இறைஅலைகளோடு இல்லாத எமது நாட்கள் எல்லாம், பிச்சை எடுப்பதற்கு சமமாக இருந்திருக்கின்றது  என்பதை பல முறை உணர்ந்திருக்கின்றேன்.விட்டதை பிடித்து மீண்டும் இருக்கும் பழைய நிலையை அடைய எம்மை தயார் படுத்திக்கொண்டு, எம்மை சரிசெய்து மீண்டும் இறைஉலகத்தில் எம்மை செலுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.காலமே வென்று போகட்டும்  கடைசியில், ஆனால் முயற்சிகள் தொடரவேண்டுமல்லவா ? .ஊற்றை சடலத்தை வைத்துகொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் கடைசியில் சாம்பலாகும்  சரீரம் வளர்க்க,
இருக்கும் பொன்னான காலத்தை  நன்மை தாராமல்  பயன்படுத்தல் எங்கனம் ஞாயமாகும்?

Be energetic always  என்பதற்கு நிறைய  வழிகள் இருக்கின்றன  என்பது நாம் அனைவருக்கும் மிக பரீட்சயமான ஒன்று.அதை சற்று ஞாபகபடுத்துவதே இதன் நோக்கம்.ஒரு சில ஸ்லோகங்கள், அங்கே மிக  அதீத சக்தி அதிர்வு அலைகள் பொதிந்து கிடக்கிறது. இவை சரியான முறையில் பயன்படுத்த ,நம்மை சுற்றி,நம் செய்யும் செயல்கள் யாவற்றிலும், நல்ல  energetic field ஜ உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது.எந்த வார்த்தை எந்த   அதிர்வு அலையை மனதில் எழுப்பி  ,எவ்வாறு ஆத்மாவின் ஜீவ அலையை fine  tune செய்து, ஆக்கசக்தியாக, வளம் தரும் சக்தியாக  மாற்றும் தன்மை  உண்டு, என்பதை நன்கு பிரித்து உணர தெரிந்தவன் ஞானி.ஏனையோர்  இங்கே எம்மை போன்று கத்துக்குட்டிகளே. இதற்கு இதுபோன்ற பயன்கள் என  நிறைய சொல்லஇயலும்.இப்படி சொல்வதை விட நேரடியாக இதை பயன்படுத்தி என்னென்ன நன்மைகள்  ஏற்படுகிறது என்பதை  செயல்படுத்தி உணர்ந்து பார்ப்பதே சாலச்சிறந்தது.

ஒரு செயலைவெற்றியோடு முடிக்க அதன் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையே எத்தனைதடைகள் உள்ளதோ,அதனை ஒவ்வொன்றாக சரிசெய்து  போராடி இறுதியில் வெற்றியினை அடைவது என்பது ஒரு சாதாரண approach.ஆனால் இங்கே  இந்தஜீவ இறைஅலைகள் தொடர்போடு   எந்த ஒரு செயலையும் எதிர்கொள்ள, அஞ்ஞானம்  ( பொருள் ,செயல் தன்மை பற்றிய அறியாமை) அகன்று ,உண்மை நிலை தானாக அறியப்பட்டு, இனிவரப்போகும் நிகழ்வு செயல் பற்றிய விழிப்பு நிலையினை முன்கூட்டிய கணிக்கும் அறிவு பெறப்பட்டு, வெற்றியை  அடைவது, என்பது இந்த energetic approach. முயன்று பார்ப்பதில் என்ன தவறு ? இழப்பு ஒன்றுமில்லையே.முயன்று பாருங்கள் !


நண்பர் ஒருவர் சமஸ்கிருத மொழியில்  ஒரு சில ஸ்லோகங்களை விளக்கிக்கொண்டிருந்தார். உண்மையாக அதன் அர்த்தம் எம்மால் உணரஇயலவில்லை .ஆனால் நண்பர் பேசும் பேச்சில், தொனியில்,அங்கிருந்து வெளிக்கிளம்பிய அலையில் ,ஏதோ ஒரு ஆற்றல் இருப்பது  மற்றும் தெரிந்தது. அபப்டி ஆழ்ந்து கவனிக்க ,நண்பர் விளக்கிய ஸ்லோகம் ,ஒரு விதஇறைஆற்றலை உள்ளடக்கியது  என்பதை மெதுவாக உணரமுடிந்தது.இதை யாவருக்கும் தெரிந்த ஒன்று தான்என்றாலும் , செயல் முறைபடுத்தாமல் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீக்க  வழி வகை செய்தல் வேண்டும்  என எண்ணத்தோன்றியது.

ஆதிசங்கரர் எழுதிய ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம், மிக பிரசித்திபெற்ற  சக்திவாய்ந்த  ஸ்தோத்ரங்களுள்  ஒன்று. எந்த அளவுக்கு இறைநிலையில் ஒன்றுகலந்து ,ஒரு மெல்லிய அலைநீளம் பிடித்து, தாயவள் அருள்அலைகளை தொடும் வண்ணம், இதனை அழகான வார்த்தைகளால் கோர்வையாக்கி,ஒரு தெய்வீக அருள் மனம் கமழும் அழகிய மாலையாக,ஸ்தோத்ரமமாக உருவாக்கியுள்ளார்கள்.இதற்காகவே காலமெல்லாம் ஆதிசங்கரரின் திருவடிதொழவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கும் இடம்  தரும் அலை, ஒரு தனி ஆன்மீக சுகம்.அதே போல் திருவண்ணாமலைகோவில் கருவறை தரும் சுகம் ஒரு தெய்வீக சுகம்,சூட்சுமத்தை திறப்பது போன்று ஒரு சுகம்.இவை யாவும் அங்கே நேரே சென்று உணரவேண்டிய அலைகள்.ஆனால் இங்கே ஆதிசங்கரர்  தாம் உணர்ந்த இறை அலைகளை ,இங்குள்ள வார்த்தைகளால் பிடித்து யாவரும் உணரும் வண்ணம் வைத்துள்ளார்கள்.எந்தஅளவுக்கு ஒரு உயிர் ஈர்ப்பு காதல் இங்கே  ? காதலே தெய்வீகமாக மாறுகிறது.இமைப்பொழுதும் பிரியாத தீவிர அன்பு இங்கே.சர்வமங்களமும் நிறைந்த ஒரு அழகிய திருமுகம் ,இமைமாறாது பரந்தாமன்  அழகிலே மயங்கி,மருடி,அதனால் உண்டான பிரேமத்தால்,தம்மையே மறந்து ,தமக்கும் இறைவனுக்கும் இடையே  யாருமே பிரிக்க இயலாத ஒரு நுண்ணிய  தெய்வீக காதல் கொண்டு ,அன்பு அலைகளால் வியாபித்து,பரமானந்தத்தில் திளைக்கும் ஒரு தெய்வீக மகள்,திருமகள்.இத்திருமகள்  பார்வை படுமிடமெல்லாம் கோடி கோடி புண்ணியமாம்.நினைத்து பார்க்க இயலாத, அளவிடமுடியாத செல்வ வளம் பெருகுமாம் .மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதயா !

துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்,சூரிய ஒளி பட்டால் பணிவிலகுவது போல,தாயவள் அருள் பார்வை பட,நம்மை பிடிந்திருந்த கர்மம் ஓடிவிடும்.வறுமை  விலகிவிடும். நல்ல செழுமைநோக்கிய அலைகலை உருவாக்கும்.எந்த ஒரு வறுமைக்கும் அவர்தம் கர்மவினைதானே காரணம்? அவைகளை விரட்டியடிக்கும் தாயவள் திருஅருள் பார்வை.எங்கு தாயவள் அருள் இருக்கிறதோ ,அங்கே சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கிறதாம்.மான் விழி போல மருண்ட பார்வையில்,என்றும் அண்ணலின் மீது இடைவிடாத இவள் கொண்டுள்ள காதல் ,அதற்கு ஆதிசங்கரர் தரும் உவமை,இவை யாவும் படிக்கவே பிரமிப்பாக உள்ளது.இந்த உலகத்தில் உட்சென்று ,அர்த்தங்களை புரிய முற்படும் போதே ,ஒரு வித அலை சூழ்வது போன்ற ஒரு பிரம்மை .ஆம் அது ஒரு ஜீவ அலை,செல்வ வளம் தரும் அலை.சகல ஐஸ்வர்யங்களையும் பெற வைக்கும் அலை என்பது யாம் ஒரு துளி உணர்ந்த சத்தியமான உண்மை.மீண்டும் மீண்டும் இடைவிடாது இந்த அலைகளை உணர முயற்சிசெய்வது என்றும் நம்மை செல்வவளத்தில் வைத்திருக்கும் என்பதும் உண்மை.
 இதனுள் ஓரிரு முறை முயன்று உச்சரித்து முடிந்த வரை தினந்தோறும் சொல்ல முயற்சி செய்யுங்கள் .இதனை எவ்வாறு உச்சரிப்பது இதன்  சரியான பொருள்,விளக்கம் முதல் mp3 வரை எல்லாம் இந்த வலைஉலகத்தில் கொட்டிக்கிடக்கின்றது.தேடி நன்கு இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இதிலே செல்வவளமை அளிக்கும் ஒருவித சூட்சும அலை பொதிந்துள்ளது.அன்பால் உருகி தாயவள் ஸ்ரீமகாலட்சுமியின் அருள்பார்வை பெற்றிடுங்கள்.

ஒம் அகத்தீஸ்வராய நமக... !


ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 



அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம (என்னுடைய) மங்களதேவதாய:



மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் தமால  மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

 
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

 
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை
வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

 
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
 

மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.







.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி