உடலே போற்றி !! உள்ளமே போற்றி !!!
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. -மாணிக்கவாசகர் உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும் .மனதால் நினைக்க இயலாத திருவருள் இறைவன் .இறைவன் ஒருவன் இப்படி தான் இருக்கின்றான் என்றால் மனதால் நினைத்துவிடாலாம் .ஆனால் உள்ளத்திற்கு தெரியாதே இறைவன் எப்படி இருப்பான் என்று ? எப்படி நினைப்பது இறைவனை ? . அடுத்த வரியில் மாணிக்க வாசகப்பெருமான் விடை தருகின்...